கிணற்றில் விழுந்த விவசாயி சாவு
பாலக்கோடு: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த பி.கொல்லஹள்ளி கிரா-மத்தை சேர்ந்த விவசாயி சிவக்குமார், 37. இவரது மனைவி பட-வட்டம்மாள், 30. தம்பதிக்கு, 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் காலை, 9:00 மணிக்கு சிவக்குமார், தன் விவ-சாய நிலத்திலுள்ள கிணற்றில், தண்ணீர் அளவை பார்க்க கயிறு கட்டி கிணற்றுக்குள் இறங்கினார். கிணற்றிலிருந்து மேலே ஏறி வந்தபோது,
பக்கவாட்டு சுவற்றில் மோதி, கிணற்றுக்குள் தவறி விழுந்தார்.
இதில், பலத்த காயமடைந்தவரை, பாலக்கோடு தீயணைப்பு துறையினர் உதவியுடன் மீட்டு, தர்மபுரியில் உள்ள தனியார் மருத்-துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சிவக்குமார்
ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பாலக்கோடு போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஜிஎஸ்டி நீக்கம் எதிரொலி; ரூ.1 கோடிக்கான மருத்துவக் காப்பீட்டில் மக்கள் ஆர்வம்
-
மே 2வது வாரத்தில் காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பு
-
அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பு; இந்திய வானிலை மையம்
-
தவறை தட்டி கேட்டது தவறா? மனைவி, மகள் கண் முன் பயணியை அடித்து அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் அராஜகம்
-
பிளாஸ்டிக் குடம் விற்பனை அதிகரிப்பு
-
தங்கம் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்தது; இன்றைய நிலவரம் இதோ!
Advertisement
Advertisement