டிஜிட்டல் இந்தியா புதிய சாதனை; யுபிஐ பரிவர்த்தனை ரூ.314 லட்சம் கோடியைத் தாண்டியது

1

நமது நிருபர்




இன்றுடன் பத்தாண்டுகளை நிறைவு செய்துள்ள யுபிஐ பணப்பரிவர்த்தனை முறை, டிஜிட்டல் இந்தியாவின் மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது. 2025-26 நிதியாண்டில் மட்டும் யுபிஐ பரிவர்த்தனை ரூ.314 லட்சம் கோடியைத் தாண்டியது.

இது தொடர்​பாக மத்​திய நிதி அமைச்​சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: யுபிஐ அறிமுகமாகி 10ஆண்டுகள் நிறைவு அடைந்து, உலகின் மிகப்பெரிய பணப்பரிவர்த்தனைத் தளமாக உருவெடுத்து, இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்திற்குத் தூணாக விளங்குகிறது.

கடந்த 10 ஆண்டுகளில் பரிவர்த்தனைகள் 12,000 மடங்கு உயர்ந்துள்ளது. 2025-26ம் நிதியாண்டில், ரூ.314 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. 700க்கும் மேற்பட்ட வங்கிகள் யுபிஐ வசதிகளை பயன்படுத்துவதால், பணப்பரிவர்த்தனைகளில் கிட்டத்தட்ட 49 சதவீதம் யுபிஐ வாயிலாக தான் நடக்கிறது.

2016-17 நிதியாண்டில் வெறும் 2 கோடியாக இருந்ததிலிருந்து, 2025-26 நிதியாண்டில் 24,162 கோடிக்கும் அதிகமான பரிவர்த்தனைகளாக உயர்ந்துள்ளது. பரிவர்த்தனை மதிப்பு 2016-17 நிதியாண்டில் ரூ.0.07 லட்சம் கோடியிலிருந்து 2025-26 நிதியாண்டில் 314 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

உலகின் மிகப்பெரிய விரைவான பணம் செலுத்தும் வழியாக யுபிஐ முறையை ஐஎம்எப் அங்கீகரித்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement