கண்ணகி கோவில் சித்ரா பவுர்ணமி விழா கேரள போலீஸ் கெடுபிடி; பக்தர்கள் அதிருப்தி
கூடலுார்: தமிழக - கேரள எல்லையில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோவில் சித்ரா பவுர்ணமி விழாவில், இரு மாநில பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.
தேனி மாவட்டம், கூடலுார் அருகே தமிழக - கேரள எல்லை, விண்ணேற்றிப்பாறை மலை உச்சியில் அமைந்துள்ளது மங்கலதேவி கண்ணகி கோவில். இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமி தினத்தன்று விழா கொண்டாடப்படும். இக்கோவிலுக்கு செல்ல கேரள வனப்பகுதி வழியாக, 14 கி.மீ., துாரத்தில் ஜீப் பாதையும், தமிழக வனப்பகுதியான பளியன்குடியில் இருந்து, 6.6 கி.மீ., தெள்ளுக்குடி வழியாக, 3.5 கி.மீ., துார நடைபாதையும் உள்ளது.
நேற்று, சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு, கண்ணகி பச்சை நிற பட்டுடுத்தி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தமிழக பூசாரி ராஜலிங்கம் பூஜை செய்தார்.வழக்கத்தை விட இந்த ஆண்டு அதிகமாக பக்தர்கள் வந்தனர். குமுளியில் இருந்து கேரள வனப்பகுதி வழியாக கோவிலு க்கு செல்ல, ஜீப்புகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இம்முறை குறைத்ததால் தரிசனம் முடித்து திரும்பி செல்ல முடியாமல் பக்தர்கள் சிரமப்பட்டனர்.
கோவில் வளாகத்தில் தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில், வருவாய் துறையினர் பொங்கல் வைக்க முயன்றபோது, அனுமதி இல்லை எனக்கூறி கேரள போலீசார் தடுத்தனர். இரு மாவட்ட கலெக்டர் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படியே பொங்கல் வைப்பதாக, தமிழக வருவாய் துறையினர் நீண்ட நேரம் வாக்குவாதம் செய்த பின், அனுமதி அளித்தனர்.
இதற்கிடையே, தரிசனம் முடித்து கோவில் வளாகத்தில் இளைப்பாறிய பக்தர்களை மதியம், 12:00 மணிக்கே கோவிலை விட்டு வெளியேற கேரள போலீசார் கெடுபிடி காட்டியதால், பக்தர்கள் வேதனை அடைந்தனர்.
படங்களை அறிமுகப்படுத்தியவர்களுக்கு கண்ணகி மீது வெறுப்பு இருக்கத்தானே செய்யும்
குப்பைகளை கொண்டு வந்து கொட்ட அனுமதித்தால் இப்படித்தான் செய்வார்கள்.
கேவலமான ஏற்பாடுகள். நேற்று நானும் போயிருந்தேன். சோத்து மூட்டை ஏற்பாட்டை கேரளா செஞ்சிருந்தாங்க. சுவையில்லாத சோத்தை தட்டு தட்டா வழங்கி நிறைய பேர் பாதியை அங்கேயே அங்கங்கே வீசி எறிசாச்சு. வந்திருந்த வேன்களில் பாதிக்கு மேல் போலீஸ் வனத்துறையும் அவிங்க ஆளுங்களும்தான். மாலை 4 மணி சுமாருக்கு இடி மின்னலுடன் மழை சுமார் ரெண்டுமணி நேரம் கொட்டியது. போலீசும் அவிங்க ஆளுங்களும் முதலில் எஸ்கேப். குமுளி செல்லம் மலைப்பாதை சகதியில் சின்னகுழந்த்சிகள், முதியவர் எல்லோரையம் நடக்க உட்டாங்க. அதிலும் பாதிவழி யில் போலீஸ் வேன்ல போனவங்க மாட்டிகிட்டு முழிச்சாங்க. சுமார் ரெண்டு மணி நேரத்துக்கப்புறம் ஒரு வண்டி வந்து குமுளி வந்தோம்.அதிலும் பாதி வழியில் எங்களை இறக்கிவிட்ட கேரள போலிஸ் போலீஸ் ஆளுங்க வந்த வண்டிகளை அனுமதிச்சாங்க. குமுளி மழையில் ஒரு மணி நடை. வேன்காரன் கூலியை குறைக்கவே இல்லை.
தமிழ்நாட்டு போலீசை விட கேரளா போலீஸ் மேலதிகாரிகளுக்கு கூழைக்கும்புடு அதிகமாவே போடுறாங்க என்பது. ஒரு சிறு ஆறுதல். இத்தனைக் கூட்டம் வரும்னு தெரிஞ்சும் இத்தனை வருசமா எதையுமே கத்துக்கலை என்பதே உண்மை. வந்தவங்களில் நிறையபேர் சுற்றுலா ஹைக்கிங்னு வந்ரவங்க.
சாராயக்கடைகள் நடத்தி பெற்ற அனுபவத்தில் கெடுபிடி செய்கிறார்கள்
இண்டி கூட்டணியில் உள்ளவர்கள்... தானே ஆட்சியில் உள்ள இரு
மாநிலத்தில் உள்ளவர்கள். எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று கூறுபவர்கள் மெளனமாக இருக்கிறார்கள்.