பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்

புதுச்சத்திரம்: ரெட்டியார்பேட்டை கேசவ பெருமாள் கோவிலில், திருக்கல்யாணம் நடந்தது. இதையொட்டி, கடந்த 27 ம் தேதி காலை 5:00 மணிக்கு லஷ்மி ஹோமம், திருமஞ்சனம், கொடியேற்றம் மற்றும் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. மாலை 6:00 மணிக்கு மகா தீபாராதனை, 7:00 மணிக்கு சேஷ வாகனத்தில் சுவாமி வீதி உலா நடந்தது. தொடர்ந்து, 28 ம் தேதி மாலை 6:00 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, மகா தீபாராதனை நடந்தது.

29 ம் தேதி மாலை 6:00 மணிக்கு லட்சுமி நரசிம்மர் அவதாரத்தில் சுவாமி வீதி உலா, 30 ம் தேதி மாலை 7:00 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, மகாதீபாராதனை நடந்தது.

சிறப்பு விழாவான திருக்கல்யாணம் மே 1 ஆம் தேதி நடந்தது. அதையொட்டி மாலை 3:00 மணிக்கு பெருமாளுக்கு திருமஞ்சனம், சிறப்பு அபிஷேக ஆராதனை, இரவு 8.00 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத கேசவ பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடந்தது. மே 2 ஆம் தேதி மஞ்சள் நீராட்டு விழா, சுவாமி வீதி உலா நடந்தது.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், கிராம பொதுமக்கள் செய்தனர்.

Advertisement