ஒரு சில தொகுதிகளில் விசிகவினர் தேர்தல் பணியாற்றவில்லை: திருமா கண்டுபிடிப்பு
சென்னை: ''ஒரு சில தொகுதிகளில் விசிகவினர் தேர்தல் பணி ஆற்றவில்லை'' என்று அக்கட்சி தலைவர் திருமாவளவன் வெளிப்படையாக பேசியுள்ளார்.
அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: விசிக சார்பில், அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் தேர்தல் பணி குழு நியமனம் செய்யப்பட்டது. ஒரு சில தொகுதிகளை தவிர ஆங்காங்கே கட்சியினர் தொகுதி வாரியாக கட்டுக்கோப்பாக இருந்து, சிறப்பாக பணியாற்றி இருக்கிறார்கள். தேர்தல் பணி ஆற்றியதில் ஒரு சில தொகுதிகளில் இருந்து கட்சியினர் ஒற்றுமையாக இருந்து பணியாற்றவில்லை என்று தகவல் வந்துள்ளன. இது குறித்து தவல்கள் திரட்டப்பட்டு வருகின்றன.
களப்பணி ஆற்றிய கட்சியினருக்கு பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை சட்டசபை தேர்தல் என்கிற போது, ஒவ்வொரு தேர்தலிலும் பலர் பொது தொகுதிகளில் இந்த முறை வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதும், அப்படி தங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாத நிலை வரும் போது, ஏமாற்றம் அடைவதும் ஒரு தொடர்கதையாக இருக்கிறது. குறைவான தொகுதிகளை நாம் பெறும்போது வேட்பாளர்களை மாற்றும் நிலை உருவாகிறது.
புதிய புதிய ஆட்களுக்கு வாய்ப்பு தர வேண்டும் என்ற நிலைப்பாட்டை புறம் தள்ள முடியாது. அந்த கோரிக்கை வலுவாக எழுகிறது. 2001ல் தேடி, தேடி ஆட்களை பிடித்து போட்டேன். 2006ல் கூட மிக குறைவான வேட்பாளர்கள் தான் போட்டி போட்டார்கள். 2011ல் அதிகரித்தது, 2016ல் இன்னும் அதிகரித்தது. 2021 ஒரு தொகுதிக்கு 10 பேர் என்று போட்டி அதிகரித்தது. புதிய முகங்களுக்கு வாய்ப்பு தர வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய கட்டாயம் எழுகிறது.
புதியவர்களுக்கு சீட் வழங்க வேண்டும் என்பதற்காக எம்எல்ஏக்கள் 3 பேருக்கு சீட் வழங்க இயலாமல் போனது. அதற்கு வெவ்வேறு காரணங்களை பலரும் சமூக ஊடகங்களில் எடுத்து சொன்னார்கள்; விவாதித்தார்கள். அந்த காரணங்கள் ஏதும் உண்மை அல்ல. திமுக கூட்டணியில் உறுதியோடு இருக்கிறோம்.
நான் சட்டசபை தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்த போதும் யாருடனும் விவாதிக்கவில்லை. தேர்தலில் போட்டி எனும் எனது அறிவிப்பைத் தொடர்ந்து விசிக முக்கிய நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.
@block_P@
மேலும் வீடியோவில் திருமாவளவன் கூறியதாவது: திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி ஆகிய இரண்டு கூட்டணிகளையும் பின்னுக்கு தள்ளி ஆட்சியை கைப்பற்றும் அளவுக்கான வலிமையை அவர் (விஜய்) பெற்றிருக்கவில்லை. அதற்கான வாய்ப்பே இல்லை. எப்படி கணக்குப் போட்டு பார்த்தாலும் திமுக கூட்டணிதான் வெற்றி பெறும். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.block_P
இந்த தேர்தலோட எல்லாம் காலி
ஐயோ பாவம் ஒத்த பிளாஸ்டிக்கும் ஷேர்க்கும் ஆபத்தா சோனமுத்தா ஹீஹீஹீ
விஷயம் என்னன்னா உள்ளார உடல..
அமைச்சர் பதவி தர முடியாதுன்னு சொல்லி கூட்டணி என்று வெளியில் கூறியவர்கள் எல்லாம் அந்த திருட்டு கட்சிக்கு ஆப்ப செருகிட்டாங்கோ...அது புரியாம இருபத்தி மூணாம் புலிகேசி கருத்து கணிப்பு என்று ஒரு திணிப்பை புரளி கிளப்பி விட்டு பின் தோற்றவுடன் மத்திய அரசின் சதி ஓட்டு பெட்டியில் கோல்மால் பண்ணி விட்டார்கள் என்று ஒப்பாரி வைக்கிறார் பாருங்க....
ஹாஹாஹா துண்டுசீட்டு ராசிப்பா
இப்ப புலம்பி என்ன பயன்
கூட்டணி சேருவதால் தானே குறைவான சீட்டுகள் கிடைக்கிறது.. பேசாமல் 234 தொகுதிகளிலும் உங்கள் கட்சி வேட்பாளர்களியே நிறுத்தினால் எல்லோருக்கும் சீட்டு கிடைக்குமே..
என்ன... ஓட்டுபோடுவதற்குத்தான் கட்சியில் ஆள் இருக்கமாட்டார்கள்.. இது ஒரு கட்சி.. இவர் ஒரு தலைவர்..
அக்கா மகளை நிறுத்தி விட்டு தொண்டர்களை உழைக்கச்சொன்னால் யார் செய்வார்கள் .
விசி ஒழுங்கா வேல செய்யல..காங்கிரசிம் வேல செய்யல..ஆனால் கருத்து கணிப்பு மட்டும் திமுக மீண்டும் ஆட்சியை பிடிக்குமாம்.
எல்லாம் காசு, பணம், மணீ துட்டு, துட்டு, 240 எம் எல் சீமா சாராயம் பிளஸ் பிரியாணி. தீய கட்சி வெற்றி. வெட்கம் கேட்ட மக்கள்.
செல்வப்பெருந்தொகை போல இவரும் ஏதாவது சோதனை என்று ஒப்பேற்றினாரோ என்னவோ....