வரட்டுபள்ளத்தில் 9.60 மி.மீ., மழை

ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் பகல் பொழுதில் வெயில் சுட்டெரிக்கிறது. நேற்று முன்தினம் வரட்டுபள்ளம் அணை பகுதியில் மட்டும், 9.60 மி.மீ., மழை பெய்தது. மாவட்டத்தின் ஏனைய பகுதிகளில் மழை பொழிவு இல்லை. நாளை அக்னி நட்சத்திரம் துவங்கும் நிலையில் கோடை மழை இல்லாததது, மக்களை கவலை அடைய செய்துள்ளது.
பர்கூரில் கனமழை
அந்தியூரை அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் நேற்று காலை, 11:00 மணிக்கே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில், 12:00 மணிக்கு மழை பெய்ய தொடங்கியது. ஒரு மணி நேரம் பர்கூர், துருசனாம்பாளையம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில் கனமழையாக கொட்டி தீர்த்தது.

Advertisement