மேற்கு வங்கத்தில் ஆட்சியை கைப்பற்றியது; கேரளாவை வென்றது காங்கிரஸ் கூட்டணி
நமது நிருபர்
மேற்கு வங்கத்தில் 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த திரிணமுல் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி, பாஜ வெற்றி பெற்றுள்ளது. அசாமில் மீண்டும் பாஜ கூட்டணியே ஆட்சி அமைக்கிறது. கேரளாவில், கம்யூனிஸ்ட் கூட்டணியை காங்கிரஸ் கூட்டணி வீழ்த்தி பத்தாண்டுக்கு பிறகு ஆட்சியை கைப்பற்றுகிறது.
மேற்கு வங்க தேர்தலில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜவுக்கும் கடும் போட்டி நிலவியது. 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த திரிணமுதல் காங்கிரஸ், வங்கதேசத்தில் இருந்து வரும் ஊடுருவல்காரர்களுக்கு ஆதரவு அளிப்பதாகவும், அவர்களுக்கு ரேஷன் கார்டு உள்ளிட்ட சலுகைகளை வழங்கி ஓட்டு வங்கியாக மாற்றி வைத்திருப்பதாகவும் பாஜ குற்றம் சாட்டியது.
இதை மறுத்த முதல்வர் மம்தா பானர்ஜி, மத்திய அரசு, தன் நிர்வாகத்தில் தலையிடுவதாக பதிலுக்கு குறை கூறினார். தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் சிறப்பு திருத்தம் உள்ளிட்ட செயல்பாடுகளையும், மம்தா குற்றம் சாட்டி வந்தார்.
எனினும், அவரது ஆட்சியை காட்டாட்சி என்றும், மக்களுக்கும் , குறிப்பாக பெண்களுக்கும் பாதுகாப்பில்லாத ஆட்சி என்றும் பாஜ விமர்சனம் செய்தது.
மம்தா ஆட்சியின் செயல்பாடுகளை விமர்சிக்கும் வகையில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர், மேற்கு வங்கத்தில் விரிவான பிரசாரம் மேற்கொண்டனர்.திரிணமுல் ஆட்சியில் பணி நியமனம், டெண்டர் முதல் பல்வேறு துறைகளில் நடந்த ஊழல்களை பாஜ அம்பலப்படுத்தியது. மக்கள் மத்தியில் தொடர் பிரசாரமும் செய்தது. இதன் பயனாக, பாஜ, தனிப்பெரும்பான்மைக்கும் தேவையான இடங்களில் முன்னிலை பெற்று மேற்கு வங்கத்தில் ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
மாலை 6:30 மணி நிலவரப்படி பாஜ 204 தொகுதிகளையும், திரிணமுல் 83 தொகுதிகளையும் கைப்பற்றும் நிலையில் உள்ளன.
சட்டசபை தேர்தல் நடந்த அசாமில் பாஜ மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. மூன்றாம் முறையாக தொடர்ந்து பாஜ இந்த மாநிலத்தில் ஆட்சியை பிடிக்கிறது. மாலை 6:30 மணி நிலவரப்படி பாஜ கூட்டணி 102 இடங்களையும் காங்கிரஸ் கூட்டணி 21 இடங்களையும் கைப்பற்றும் நிலையில் உள்ளன.
கேரளாவில், பத்தாண்டு இடைவெளிக்கு பிறகு காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கைப்பற்றியுள்ளது. மாலை 6:30 மணி நிலவரப்படி காங்கிரஸ் கூட்டணி 100 இடங்களை வென்றுள்ளது. இடது முன்னணி 35 இடங்களையும், பாஜ கூட்டணி 3 இடங்களையும் வென்றுள்ளன.
கேரளாவில் சாத்தன்னுார், கழக்கூட்டம், நேமம் ஆகிய மூன்று தொகுதிகளில் பாஜ வெற்றி பெற்றுள்ளது. நேமம் தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் வெற்றி பெற்றார். புதுச்சேரி தொகுதியில் ரங்கசாமி கட்சி மற்றும் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, பெரும்பான்மைக்கு தேவையான 16 தொகுதிகளுடன் ஆட்சியை மீண்டும் கைப்பற்றியுள்ளது.
மேற்குவங்கத்தில் வென்றாலும் பாசக்கவுக்கு செய்யவேண்டிய வேலைகள் நிறைய உள்ளன ....
வந்தேறிகளை வங்காளம் மட்டும் அல்லாமல் இந்திய முழுவதும் பரப்பிய ஒரு சொர்நாக்காவின் 15 வருட கொடுங்கோல் ஆட்சி முடிவுக்கு வந்து உள்ளது நாட்டின் பாதுகாப்பிற்கு நல்லது. அசாம் மற்றும் வங்காளத்தின் வெற்றி என்பது தேச விரோத புள்ளி கூட்டணிக்கு அடிக்கும் கடைசி சாவு மணி ஆகும்.
பாஜக தான் உதித்த இடத்தில் மிக நீண்ட ஆண்டுகளுக்கு பின் வேர் விட்டுள்ளது. அராஜக அரசியல் செய்த சொர்ணக்கா அவுட். இரண்டு இண்டி கட்சிகள் ஆட்சியில் இருந்து அவுட்.
இங்கேயும் முயற்சித்திருக்கலாம்
தமிளு நாட்லயும் மே வங்கத்திலயும் இந்த எஸ் ஐ ஆர் சாரு உள்ர வர வுட்ருக்கக்கூடாதுமே
வாழ்த்துக்கள் பாஜக இது மகத்தான வெற்றி.. சொர்ணாக்கா கும்பல் அட்டூழியம் + வந்தேறி கும்பலின் அட்டூழியம் அடக்கப்படும் இந்தியாவிற்கு தேவையான மிக முக்கியமான வெற்றி
ஏதோ கேரளாவால் காங்.பப்புவுக்கு ஆறுதல்.!
கால் ஊன்ற முடியாது. என்று கூறியவர்கள் இனி அரசியலில் எதுவும் நடக்கும் என்று கூற ஆரம்பிப்பார்கள்.
முன்னாள் மிகப் பெரியக் கம்யூனிஸ்ட் தலைவர்கள் அந்த நாளில் ஜனசங்கம் அங்கு கால் ஊன்ற முடியாது என்று மேடை தோறும் முழங்கினார்கள்.இன்று?அரசியலில் இது நடக்காது என்று கூறவே முடியாதுமாற்றத்திற்கு உட்பட்டதுமேலும்
-
சென்னைக்கு .... மெயின் செய்திக்கு இணைப்பு
-
உளுந்துார்பேட்டை தொகுதியில் தி.மு.க., – அ.தி.மு.க., க்கு இறுதி வரை கடும் போட்டி
-
ஓட்டுப்பதிவு இயந்திரம் பழுதால் உளுந்துார்பேட்டை முடிவு தாமதம்
-
வெற்றி பெற்றாலும் மகிழ்ச்சி இல்லை தே.மு.தி.க., தொண்டர்கள் வாட்டம்
-
பிரேமலதாவுக்கு தேர்தலில் முதல் வெற்றி இறுதிவரை இழுபறியால் திக்..திக்..
-
திண்டிவனம் (தனி) தொகுதி வி.சி., வெற்றி