திமுக.,வின் படுதோல்விக்கு என்ன காரணங்கள்?: கருத்து எழுதுங்கள் வாசகர்களே!
சென்னை: கடந்த சட்டசபை தேர்தலில் தனிப்பெரும்பான்மை உடன் ஆட்சி அமைத்த திமுக, இந்த முறை படுதோல்வியடைந்தது. கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கி திமுகவுக்கு தோல்வியை பரிசாக அளித்துள்ளனர் தமிழக மக்கள்.
திமுக.,வின் தோல்விக்கு கீழ்க்கண்ட காரணங்கள் கூறப்படுகின்றன.
* கட்டுப்பாடுகள் இல்லாத கஞ்சா போதை நடமாட்டம்,
* திமுக அரசின் ஹிந்து விரோத செயல்பாடுகள்,
* ஆங்காங்கே நடைபெற்ற பாலியல் வன்கொடுமை சம்பவங்கள்,
* அதிகமாக நடந்த கொலைகள்
* சட்டம் ஒழுங்கு சீர்கோடு,
* போலீஸ் துறையில் அரசியல்வாதிகள் தலையீடு,
* பொது இடங்களில் கட்டுப்படுத்தப்படாத ரவுடிகளின் அராஜகம்,
* அரசு துறைகளில் தாண்டவமாடிய லஞ்ச லாவண்யம்,
* கேள்வி கேட்கபடாத அதிகாரிகளின் ஆட்டம்,
* மோசமான சாலை மற்றும் கட்டமைப்பு வசதிகள் என பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.
திமுக தோல்விக்கு என்ன காரணம் என வாசகர்களான நீங்கள் நினைக்கும் காரணங்களையும் கமென்ட் பகுதியில் பதிவிடுங்கள்.
நிறைவேற்ற முடியாத தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசி மக்களை ஏமாற்றியது, கொலை, போதை பொருள் விற்பனை, பெண்களுக்கு பாதுகாப்பின்மை, ஊழல், காவல்துறையை ஏவலாளி மாதிரி உபயோகித்து இன்னும் பல, பல காரணங்கள். துண்டு சீட்டு பார்த்து கூட ஒழுங்காக பேச முடியவில்லை, இதில் திராவிட மாடல், ஒன்றியம் வஞ்சகம் என்ற கற்பனை உலகில் நீந்தி மக்களை முட்டாள்கள் என்று நினைத்து பணத்தை வாரி இறைத்து 5லட்சம் கோடி கடனாக விட்டு சென்றது. மக்கள் நிதானமாக வச்சு செய்து விட்டார்கள். எழுத இடம் போதாது
கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவை இல்லை . ஒரு மாநிலத்தை ஆள எவ்விதத்தலு ம் தகுதி இல்லாத கட்சி
திமுக வின் 2.0 கனவு பொய்த்து போக காரணம் அரசு அலுவலகங்களில் தலை விரித்து ஆடிய லஞ்ச ஊழலே. கமிஷன், கையூட்டு இல்லாமல் எதுவும் இல்லை என்ற ஒரு கேவலமான நிலை. கனிம வளங்கள் கொள்ளை போயின. போதைப் பொருட்களால் பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியானது. தன்னிடம் உள்ள பண பலத்தால் எதையும் சாதித்து விடலாம் என்று திமுக கனவு கண்டது. தேவை இல்லாமல் மத அரசியலை கையில் எடுத்தது என காரணங்களை அடுக்கி கொண்டே போகலாம். ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் போது மக்களின் கோபத்துக்கு ஆளாகும் போதுதான், மாநில முதல்வர் தோற்பது என்பது தமிழ்நாட்டின் அபூர்வ வழக்கமாக உள்ளது. அந்த வகையில் திமுக வீழ்ச்சியை சந்தித்து உள்ளது. திமுக சுய பரிசோதனை செய்து தன்னை திருத்திக் கொள்ள முன்வர வேண்டும்.
தமிழகத்தில் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்காத தமிழகம் மற்றும் கர்நாடக வாகன ஓட்டிகளால் அன்றாடம் ஏற்படும் விபத்துகள் மற்றும் மன உளைச்சல் கடும் அதிருப்தியே காரணம்.
மேலும் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சனங்களை எதிர்கொண்ட பாஜக உட்பட பல கட்சிகள்.
சட்டம் ஒழுங்கு சீர்கேடு பாலியல் கொலை கொள்ளை போதை ஆகிய கட்டுப்பாடற்ற தட்டிக்கேட்டால் வழக்கு சிறை என்ற அவலம் ஐந்து ஆண்டுகளில் 24 x 7 மணிநேரம் நீடித்ததே காரணம்.
இதை தவிர சென்னை நுங்கம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன் அருகில் உள்ள ஒரு பிரபல நிர்வாகத்தின் மறைமுக செயல்பாடு முக்கிய காரணம்.
அடுத்ததாக கிரிப்டோ கிறிஸ்தவர்கள் பங்களிப்பு.
போதை கலாச்சரம்.. பெண்கள் பாது காப்பு. மந்திரிகளின் சுயநலம், மற்றும் ஆணவம்..
இதையெல்லாம் களைந்தால் அடுத்த முறை வாய்ப்பு கிட்டலாம்..
ஆண்டவன் இருக்கான் குமாரு
சனாதனத்தை ஓஷிக்க நினைத்தவரால் வொஷிந்து போனார்கள் முருகா முருகா முருகா
ஆணவம், அலட்சியம், தன்னை யாரும் வோஷிக்க முடியாது என்ற aanavam
Collection, Corruption and கமிஷன்
இந்த காரணங்கள் போதுமா இன்னும் வேணுமா
சனாதன எதிர்ப்பிற்கான சம்மட்டி அடி.. தமிழகத்தில் இருந்து திராவிட கட்சிகள் வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கி ஏறிவதற்கான கதவு திறக்கப்பட்டு விட்டது..
இந்து விரோத போக்கு...இந்துகளின் கோயில்களை இடித்தும் சனாதனத்த ஒழிப்போம் என்று கூறியதும்..கோர்ட் தீர்ப்பு சொல்லியும் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற முடியாது என்று சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய அரசே சட்டம் ஒழுங்கு சீர்கெடும் என்று கூறியும் ...மற்ற மதத்தினருக்கு சகாயமாக நடந்து கொண்டது ம்.. தமிழனுக்கு திராவிட முத்திரை குத்தியதும்...திருட்டு திமுகாவின் அழிவுக்கு காரணம்...
ஆணவம், அராஜகம், பெண்களுக்கும் குழந்தகளுக்கும் பாதுகாப்பில்லா சூழல், காவல்துறை என்று ஒன்று இல்லாமல் போனது, அதிகாரிகளின் ராஜ்ஜியம், போதை , மாநிலத்தில் முன்றேம் என்பது இல்லாமல் போனது, ஊழலின் உச்சம். இவைகள் முக்கியம் காரணிகள் ஒரு பொம்மை முதலமைச்சராக இருந்தது மிக மிக முக்கியம காரணம் .மேலும்
-
சென்னைக்கு .... மெயின் செய்திக்கு இணைப்பு
-
உளுந்துார்பேட்டை தொகுதியில் தி.மு.க., – அ.தி.மு.க., க்கு இறுதி வரை கடும் போட்டி
-
ஓட்டுப்பதிவு இயந்திரம் பழுதால் உளுந்துார்பேட்டை முடிவு தாமதம்
-
வெற்றி பெற்றாலும் மகிழ்ச்சி இல்லை தே.மு.தி.க., தொண்டர்கள் வாட்டம்
-
பிரேமலதாவுக்கு தேர்தலில் முதல் வெற்றி இறுதிவரை இழுபறியால் திக்..திக்..
-
திண்டிவனம் (தனி) தொகுதி வி.சி., வெற்றி