தபால் ஓட்டு எண்ணிக்கையில் வாக்குவாதம்

விழுப்புரம்: விழுப்புரம் தொகுதிக்கான தபால் ஓட்டுகள் 5 டேபிள்களில் எண்ணப்பட்டது. பெரும்பாலான ஓட்டுகளில், படிவங்களில் உரிய வேட்பாளரை டிக் செய்வதற்கு பதிலாக, சிலர் கையெழுத்திட்டும், பல படிவங்களில் தபால் வாக்களிப்பவரின் ஆவண சீட்டுகளின்றியும் இருந்தன. இதனால், கணக்கில் எடுத்துக்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது.

அப்போது, அங்கிருந்த தி.மு.க., - அ.தி.மு.க., - த.வெ.க., முகவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. சிலர் கூச்சலிட்டதால், அங்கிருந்த போலீசார், துணை ராணுவத்தினர் விரைந்து சென்று, கூச்சலிட்டவர்களை வெளியேற்றினர்.

Advertisement