அமைச்சர்களை வீழ்த்தியவர்களுக்கு அதே துறைகளில் மந்திரி பதவியா? விஜய் புதிய திட்டம்

11

சென்னை: தேர்தலில், தி.மு.க., அமைச்சர்களை வீழ்த்தியவர்களை கவுரவப் படுத்தும் வகையில், அதே துறைகளில் அமைச்சர் பதவிகளை வழங்க, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளார்.

சட்டசபை தேர்தலில், 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள த.வெ.க., தலைவர் விஜய், ஆட்சி அமைப்பதற்கான முயற்சிகளில் இறங்கி உள்ளார்.

சென்னை கொளத்துார் தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் ஸ்டாலினை, த.வெ.க., வேட்பாளர் வி.எஸ்.பாபு வீழ்த்தி உள்ளார். த.வெ.க., அலையில் சிக்கி, சபாநாயகர் அப்பாவு படுதோல்வியை தழுவியுள்ளார்.

மேலும், இந்த தேர்தலில், த.வெ.க., சார்பில் முதல்முறையாக போட்டியிட்டவர்களில் சிலர், தி.மு.க., அமைச்சர்கள் துரைமுருகன், பெரியகருப்பன், மகேஷ், கீதா ஜீவன், மூர்த்தி, தியாகராஜன், அன்பரசன், சாமிநாதன், முத்துசாமி, காந்தி, மதிவேந்தன், சுப்பிரமணியன், டி.ஆர்.பி.ராஜா, ராஜேந்திரன், நாசர் ஆகியோரை தோற்கடித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளனர்.

அதனால், அமைச்சர்களை வீழ்த்திய த.வெ.க., - எம்.எல்.ஏ.,க்களுக்கு, அதே துறைகளை வழங்கி இன்ப அதிர்ச்சி அளிக்கவும், முதல்வர் ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு ஆகியோரை வீழ்த்தியவர்களுக்கும் முக்கிய துறைகள் வழங்கவும் விஜய் திட்டமிட்டு உள்ளதாகவும் த.வெ.க., வட்டாரத்தில் கூறப்படுகிறது.

Advertisement