கூட்டணி மாறியும் 'கை' கூடல: சோகத்தில் தே.மு.தி.க.,வினர்

9

விருதுநகர்: தே.மு.தி.க., விஜய பிரபாகரன் அ.தி.மு.க., கூட்டணியில் இருந்து மாறி தி.மு.க., கூட்டணிக்கு வந்தும் வெற்றி 'கை' கூடவில்லை. இதற்கு காங்., வி.சி., கட்சி யினரின் ஒத்துழைப்பு இல்லாததும், தி.மு.க.,வுக்கு வாய்ப்பு மறுக்கப் பட்டதும் ஒரு காரணம். 2024 லோக்சபா தேர் தலில் நுாலிழையில் தோற்ற இவர் இந்த முறையும் விருதுநகரில் தோற்றுள்ளார்.

2024 லோக்சபா தேர்தலில் தே.மு.தி.க., விஜயபிரபாகரன் அ.தி.மு.க., கூட்டணியில் போட்டியிட்டார். இதில் பா.ஜ., கூட்டணி தனித்து போட்டியிட்டதால் விஜய பிரபாகரன் வெற்றி வாய்ப்பை இழந்தார். காங். எம்.பி., மாணிக்கம் தாகூரிடம் 4379 ஓட்டு வித்தியாசத்தில் தோற்றார்.

மறுஓட்டு எண்ணிக்கை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்ததோடு, மாணிக்கம் தாகூர் வெற்றி யில் சந்தேகம் இருப்பதாக சர்ச்சையை கிளப்பினர். இந்நிலையில் 2026ல் தி.மு.க.,வுடன் கூட்டணி சேர்வதற்கு ஒரு மாதத்திற்கு முன் 'காங்கிரசை மட்டும் நம்பாதீர்கள் அண்ணா' என த.வெ.க., தலைவர் விஜய்க்கு அட்வைஸ் கூறினார்.

இந்நிலையில் ஒரே மாதத்தில் அவரது தாய் பிரேமலதா தி.மு.க., கூட்டணியில் இணைந்து 10 எம்.எல்.ஏ.,சீட்டும், ஒரு ராஜ்யசபா எம்.பி.,யும் பெற்றார். இதில் விருதுநகர் சட்டசபை தொகுதியில் விஜயபிரபாகரன் போட்டியிட்டார். இவரது வருகையை உள்ளூர் தி.மு.க.,வினர் விரும்பவில்லை.

காங்., கட்சியினர் பிரசாரத்தில் தங்கள் பங் களிப்பை பெரிதாக அளிக்கவில்லை. உதயநிதி வந்த பிரசாரக் கூட்டத்தில் கூட காங்., கொடியை ரோட்டோரம் நட்டு மட்டுமே வைத்திருந்தனர். பிடித்து கோஷமிட ஆளில்லை. வி.சி., தலைவர் திருமாவளவனை பிரேமலதா அவமரியாதை செய்ததாலும், தேர்தல் அலுவலக திறப்பு மீட்டிங்கில் வி.சி.,யினர் கொடியை கட்டாததாலும், அக்கட்சியினரும் அதிருப்தியில் இருந்தனர். எம்.பி., மாணிக்கம் தாகூர் ஒரு நாள் கூட பிரசாரத்திற்கு வரவில்லை.

இந்நிலையில் முதல் சுற்றில் முன்னிலை வகித்த விஜயபிரபாகரன் 8வது சுற்று முதல் பின்தங்கினார். இறுதியில் த.வெ.க., வேட்பாளர் செல்வம் 9375 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். செல்வம் 64,160 ஓட்டுக்களும், தே.மு.தி.க., விஜய பிரபாகரன் 54,202, அ.தி.மு.க., கணேசன் 34,443 ஓட்டுக்களும் பெற்றனர்.

தோல்விக்கு முக்கிய காரணம் காங்., எம்.பி., மாணிக்கம் தாகூரின் ஆதர வாளர்கள், தி.மு.க., மீது அதிருப்தி கொண்ட காங்கிரசார், வி.சி.,யினர் தான். 2வது முறையாக விருதுநகர் தொகுதியை நம்பி வந்து தோற்றுள்ளதால் விஜயபிரபாகரன் துவண்டு போய் உள்ளார்.

Advertisement