சென்னை இனி தி.மு.க., கோட்டை இல்லை

8

சென்னை: எம்.ஜி.ஆர்., காலத்தில் கூட, சென்னை மாவட்டத்தை தன் கோட்டையாக தக்க வைத்திருந்த தி.மு.க., தற்போது, அதை விஜயிடம் பறிகொடுத்துள்ளது.

அ.தி.மு.க.,வை துவக்கிய எம்.ஜி.ஆர்., ஆட்சியை பிடித்த போதிலும், சென்னையில் உள்ள சட்டசபை தொகுதிகளில், அவரால் வெற்றி பெற முடியவில்லை. தி.மு.க., தான் தொடர்ந்து, சென்னை தொகுதிகளில் வெற்றி பெற்று வந்துள்ளது.

கடந்த, 2016ல் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, அந்தாண்டில் நடந்த சட்டசபை தேர்தலில், சென்னையில் உள்ள, 16 தொகுதிகளில், 10ல் தி.மு.க., வெற்றி பெற்றது. 2021 சட்டசபை தேர்தலில், சென்னையில் அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகளே வெற்றி பெற்றன.

'எம்.ஜி.ஆர்., காலம் முதல் சென்னை எங்கள் கோட்டையாகவே திகழ்கிறது; இந்த தேர்தலிலும், சென்னையில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்று அதை மீண்டும் நிரூபிப்போம்' என, தி.மு.க.,வினர் தெரிவித்தனர்.

ஆனால், முதல்வர் ஸ்டாலின் கடந்த மூன்று தேர்தல்களில் வெற்றி பெற்ற கொளத்துாரில், இந்த தேர்தலில் த.வெ.க., வேட்பாளர் வி.எஸ்.பாபுவிடம் தோல்வி அடைந்துள்ளார். சேப்பாக்கம் திருவல்லிக்கேணி மற்றும் துறைமுகம் ஆகிய இரு தொகுதிகளில் மட்டுமே, தி.மு.க., வெற்றி பெற்றுள்ளது. மற்ற அனைத்து தொகுதிகளிலும் த.வெ.க.,வே வெற்றி பெற்றுள்ளது.

எம்.ஜி.ஆர்., காலத்திலும் சென்னையை கோட்டையாக தக்க வைத்த தி.மு.க.,வால், இப்போது அது முடியாமல் போய் விட்டது.

Advertisement