அம்மா, மகன், மருமகனுக்கு வெற்றி; தோல்வி அடைந்த சகோதரிகள்
சென்னை: சட்டசபை தேர்தலில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலர் போட்டியிட்டனர். கொளத்துார் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் தோல்வி அடைந்த நிலையில், அவரது மகனும், துணை முதல்வருமான உதயநிதி, சேப்பாக்கம் தொகுதியில் வென்று உள்ளார்.
அமைச்சர் ஐ.பெரியசாமி, திண்டுக்கல் மாவட்டம், ஆத்துார் தொகுதியிலும்; அவரது மகன் செந்தில்குமார், திண்டுக்கல் தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகள் டெய்சியின் கணவர் ஆதவ் அர்ஜுனா, த.வெ.க., சார்பில் சென்னை வில்லிவாக்கம் தொகுதியிலும்; லால்குடி தொகுதியில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்ட மார்ட்டின் மனைவி லீமா ரோஸ்; புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியில் போட்டியிட்ட அவரது மகன் ஜோஸ் சார்லஸ் ஆகிய மூவரும் வெற்றி பெற்றுள்ளனர்.
முன்னாள் மத்திய இணை அமைச்சர் தலித் எழில்மலையின் மகள் எழில் கரோலின், வி.சி.க., சார்பில் அரக்கோணத்திலும்; மற்றொரு மகள் எழில் கேத்தரின், த.வெ.க., சார்பில் மதுராந்தகம் தொகுதியிலும் போட்டியிட்டனர்; இருவருமே தோல்வி அடைந்தனர்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தொகுதியில், தி.மு.க., சார்பில் தற்போதைய எம்.எல்.ஏ., மகாராஜனும், அ.தி.மு.க., சார்பில் அவரது தம்பி லோகிராஜனும் போட்டியிட்டனர். இதில், மகாராஜன் வெற்றி பெற்றார்.
தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா, விருத்தாசலம் தொகுதியில் வென்ற நிலையில், அவரது மகன் விஜய பிரபாகரன், விருதுநகர் தொகுதியில் தோல்வி அடைந்தார்.
விஜய் முதல் இரண்டு வருடத்தை சரியாக கடந்துவிட்டால் பிறகு சமாளிக்க முடியும். ஏனென்றால் எதிர்க்கட்சி வரிசையில் அமரபோவது திமுக. வழ கொழ கொழ அதிமுக அல்ல. அரசின் கடன் மேலும் கொடுக்கப்பட்டுள்ள இலவசங்கள் இவை இரண்டுமே விஜய்க்கு மிக பெரிய சவாலாக இருக்கும். அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும் குறிப்பாக காவல்துறை என்பதும் சவால்தான் ? சிறிதளவும் அரசியல் அல்லது அதிகார ஆளுமை அனுபவம் இல்லாத கட்சி. செங்கோட்டையன், வீ எஸ் பாபு மற்றும் JCD பிரபாகர் தவிர யாருக்கும் முன்னனுபவம் சிறிதளவும் இல்லை என்பதே பெரிய சவலாகத்தான் இருக்கும்.
அரசியல் அனுபவமில்லாத விஜயை மாற்றுக்கட்சியிலிருந்து வந்து ஒட்டிக்கொள்பவர்கள் என்ன ஆட்டிவைக்கப்போகிறார்களோ? எதிர்க்கட்சியிலிருந்து வந்த ஆட்களே கூட இருந்து குழிபறிக்கும் வேலையை செய்வார்கள் எந்தெந்த ஊழல்களுக்கெல்லாம் இவர் மண்டை உருளப்போகிறதோ? எம். ஜி. ஆர். அரசியலை நன்கு படித்து தனிக்கட்சி ஆரம்பித்து வெற்றி பெற்றார் யார் யார் எத்தகையவர் என்று தெரிந்தவர் பொறுத்திருந்து பார்ப்போம் இவர் தூக்கத்தை எத்தனை பேர், எப்படியெல்லாம் கலைக்கப்போகிறார்கள் என்று
தமிழ்நாட்டை பிடித்திருந்த ஏழரைச்சனி விட்டது .இனிமேல் மக்களுக்கு நிம்மதிதான் .மேலும்
-
திடீர் மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்க எதிர்பார்ப்பு: கள ஆய்வு செய்து பிரத்யேக செயலியில் பதிவேற்றம்
-
லோயர்கேம்பில் பம்பிங் மோட்டார் பழுது: குடிநீர் வினியோகம் பாதிப்பு அதிகாரிகள் அலட்சியத்தால் மக்கள் அவதி
-
கம்பம் கவுமாரியம்மன் கோயில் திருவிழா கோலாகலம் விடிய விடிய அக்னி சட்டி ஊர்வலம்
-
அமைச்சர்களை வீழ்த்தியவர்களுக்கு அதே துறைகளில் மந்திரி பதவியா? விஜய் புதிய திட்டம்
-
கண்ணகி கோயிலில் உலா வந்த காட்டு யானைகள்
-
விஜய் ஆட்சி அமைக்க காங்., ஆதரவா? கிரீஷ் ஷோடங்கர் ஆலோசனை