எந்த மாநிலத்திலும் கம்யூ., ஆட்சி இல்லை; 50 ஆண்டுகளில் இல்லாத மாற்றம்

20


புதுடில்லி: 1977க்குப் பிறகு முதன்முறையாக, இந்தியாவில் எந்த மாநிலத்திலும் கம்யூனிஸ்ட் ஆட்சி இல்லாத சூழல் உருவாகி உள்ளது. கேரள வாக்காளர்கள் சிபிஎம் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணியை வீழ்த்தி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு வெற்றியைத் தந்துள்ளனர்.

கேரளாவில் மொத்தம் உள்ள 140 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியை சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி, காங்., தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி மற்றும் பா.ஜ., இடையே மும்முனை போட்டி நிலவியது. தேர்தல் முடிவு, முதல்வர் பினராயி விஜயனுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.


2016ம் ஆண்டு முதல் பினராயி விஜயன் அரசுக்கு எதிராக எழுந்த அலையில் ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சியுடன் பயணித்து, 102 இடங்களை வென்றது. ஆனால் இந்த முறை 2026ம் ஆண்டு தேர்தலில் படும் தோல்வி அடைந்து இருக்கிறது. 10 ஆண்டுகால இடது ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து காங்., தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சியை பிடித்துள்ளது. மொத்தம் உள்ள 140 தொகுதிகளில், 98 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது.

அதேநேரத்தில் முதல்வர் பினராயி விஜயன் தன் சொந்த தொகுதியான தர்மடத்தில் வெற்றி பெற்றார். எனினும் அவரது கட்சி காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியிடம் ஆட்சியை பறி கொடுத்தது. 1977க்குப் பிறகு முதன்முறையாக, இந்தியாவில் எந்த மாநிலத்திலும் கம்யூனிஸ்ட் ஆட்சி இல்லாத சூழல் உருவாகி உள்ளது.


இந்தத் தோல்வி, இண்டி கூட்டணியில் இடதுசாரிகளின் செல்வாக்கை அநேகமாக குறைக்கும் என்பதையும் குறிக்கிறது. இண்டி கூட்டணியில் உள்ள மேலும் 2 கட்சிகள் தோல்வியடைந்துள்ளன. மேற்வங்கத்தில் திரிணமுல் காங்கிரஸ் (முதல்வர் மம்தா)மற்றும் தமிழகத்தில் திமுக (முதல்வர் ஸ்டாலின்) ஆகிய இரண்டு கட்சிகளும் தேர்தலில் பெரிய தோல்வியை சந்தித்துள்ளன.



@block_P@

முன்பே கணிப்பு!

ஏற்கனவே ஓட்டு எண்ணிக்கைக்குப் பிறகு, நாட்டின் எந்தப் பகுதியிலும் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் இல்லை என்ற நிலை உருவாகும் என்று காங்கிரஸ் எம்பி சசி தரூர் கணித்து நிருபர்கள் சந்திப்பில் திட்டவட்டமாக கூறியிருந்தார். தற்போது அவரது கணிப்பு உண்மையாகிவிட்டது.block_P

Advertisement