ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள்; மக்கள் முடிவை ஏற்றுக்கொள்கிறோம்; மத்திய அமைச்சர் எல்.முருகன்
சென்னை: ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள், மக்கள் முடிவை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறோம் என அவிநாசி தொகுதியில் போட்டியிட்ட பாஜ வேட்பாளரும், மத்திய அமைச்சருமான எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
அவிநாசி தொகுதியில் அதிமுக கூட்டணியில், பாஜ சார்பில் போட்டியிட்ட மத்திய அமைச்சர் முருகன் தோல்வியடைந்தார். இது குறித்து சமூக வலைதளத்தில் எல்.முருகன் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள், மக்கள் முடிவை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறோம்.
2026ம் ஆண்டிற்கான தமிழக சட்டசபை தேர்தலில், அவிநாசி சட்டசபை தொகுதியில் நமது தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஓட்டளித்த மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதோடு, தமிழகம் முழுவதும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்தத் தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற வேண்டுமென்பதற்காக ஓய்வின்றி பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜ தேசிய தலைவர் நிதின் நபின், அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் களத்தில் அயராது பாடுபட்ட கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தேர்தலில் பெரும் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தவெக தலைவர் விஜய் மற்றும் வெற்றி பெற்ற அக்கட்சி வேட்பாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். இவ்வாறு எல்.முருகன் கூறியுள்ளார்.
போங்க... போயி ம.பி க்கு M.P யா ஏதாவது நல்லது செய்யுங்க. இன்னும் அஞ்சு வருசத்துக்கு இங்கே தலை காட்டாதீங்க.
Ok the mission completed you can go back to Delhi
இவரை அமைச்சராகிய யாருக்கு தமிழகத்தில் பாஜகவை குட்டிச்சுவர் ஆக்கியது தான் கைமாறு.
அண்ணாமலையின் உழைப்பில் 18% மாக இருந்த vote சதவிகிதத்தை 2% ஆக குறைத்த பெருமை
நண்டு ஒன்று மேலே ஏறினால் மற்ற நண்டுகள் கீழே பிடித்து இழுக்கும் என்று சொல்வார்கள். பிஜேபி யின் பழமை சக்திகள் அண்ணாமலை வளர்ச்சியை பொறுக்க முடியாமல் செய்த சதிக்கு அவர்களே பலி ஆகி உள்ளனர்.
நரேந்திர மோடி அவர்களிடம் இருந்து எப்படி தொகுதி பணி செய்யவேண்டும் என்பதை கற்று கொள்ளுங்கள். அப்படி செய்தால் தான் பிஜேபி க்கு வெற்றி கிடைக்கும். ஒவ்வரு தொகுதியையும், மாடல் தொகுதியாக மாற்றுங்கள். அப்போது தான் வெற்றி உறுதி.
இரண்டு சட்டசபை தேர்தல்களில், ஒரு நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி. மக்கள் நிராகரிக்கிறார்கள், ஆனாலும் வலுக்கட்டாயமாக தேர்தலில் நின்றே தீருவேன் என்றால் எப்படி. அதுதான் புறவாசல் வழியாக மாநிலங்கள் அவை உறுப்பினராகி ஒரு மந்திரி பதவியும் வாங்கியாச்சில்ல வேறு இன்னும் என்ன வேணும்?MLA ஆகி ஸ்ரீராம் நகருல செட்டுல் ஆகும் யோசனையா??
தமிழகத்தில் முருகப்பெருமானே நீதிபதி
சிவநாயகம்....கொளத்தூர் மற்றும் சென்னையில் மக்களே நீதிபதி.. ஹி.. ஹி
வெட்கமா இல்லை
எல்லா தேர்தல் தோற்று போகும் இவர் மத்திய மந்திரி எல்லா தேர்தல்களிலும் நின்று தோற்று போய் கட்சியை வளர்த்ததாக ஒரு கவர்னர் பதவி , மக்களால் நிரகிக்கப்பட்டவர்களுக்கு உயர் பதவி கொடுத்து அழகு பார்ப்பது ஜனநாயகமாமேலும்
-
திடீர் மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்க எதிர்பார்ப்பு: கள ஆய்வு செய்து பிரத்யேக செயலியில் பதிவேற்றம்
-
லோயர்கேம்பில் பம்பிங் மோட்டார் பழுது: குடிநீர் வினியோகம் பாதிப்பு அதிகாரிகள் அலட்சியத்தால் மக்கள் அவதி
-
கம்பம் கவுமாரியம்மன் கோயில் திருவிழா கோலாகலம் விடிய விடிய அக்னி சட்டி ஊர்வலம்
-
அமைச்சர்களை வீழ்த்தியவர்களுக்கு அதே துறைகளில் மந்திரி பதவியா? விஜய் புதிய திட்டம்
-
கண்ணகி கோயிலில் உலா வந்த காட்டு யானைகள்
-
விஜய் ஆட்சி அமைக்க காங்., ஆதரவா? கிரீஷ் ஷோடங்கர் ஆலோசனை