மத்திய பிரதேசத்தில் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ பற்றியதால் பரபரப்பு
போபால்: மத்தியபிரதேசத்தில் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏசி பெட்டியில் தீ பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மத்தியப் பிரதேசத்தின் ரத்லாம் மாவட்டத்தில், திருவனந்தபுரம்-ஹஸ்ரத் நிஜாமுதீன் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏசி பெட்டியில் இன்று (மே 17) காலை பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, ரயில்வே அதிகாரிகள் ரயிலை நிறுத்தி, பாதிக்கப்பட்ட பெட்டியில் இருந்த அனைத்து பயணிகளையும் வெளியேற்றினர்.
ரயில் பெட்டியிலிருந்து பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து நீண்ட நேரம் போராடி மீட்பு பணி மேற்கொண்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. டில்லி-மும்பை ரயில் பாதையில் ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
வாசகர் கருத்து (1)
Sainathan Veeraraghavan - Ontario,இந்தியா
17 மே,2026 - 16:44 Report Abuse
WHY AIR CONDITIONED CARS OFTEN CATCH FIRE IN INDIAN TRAINS. MAY BE POOR MAINTENANCE IS THE MAIN REASON. BECAUSE OF THE VAST NETWORK , FINANCIAL CRUNCH
AND LACKADAISICAL APPROACH ON THE PART OF WORKMEN IN RAILWAYS. 0
0
Reply
மேலும்
-
இன்று இரவு சென்னை வருகிறார் தமிழக கவர்னர் அர்லேக்கர்; நாளை அமைச்சரவையில் யார் யாருக்கு இடம்?
-
விஜய்யை கடவுள் எனக்கூறி பதவியேற்ற தவெக எம்எல்ஏ; புதுச்சேரி சபாநாயகர் கண்டிப்பு
-
'போர்வாள்' நாளிதழ் துவங்கினார் இபிஎஸ்!
-
வெளிநாடுகளில் இந்தியாவின் கவுரவத்தை உறுதி செய்யும் மோடி: சரத் பவார் பாராட்டு
-
மெலோனிக்கு 'மெலோடி'யை பரிசளித்த பிரதமர் மோடி; வைரலாகும் கலகலப்பு வீடியோ
-
அதிமுக எம்எல்ஏக்கள் அமைச்சரவையில் இடம்பெறமாட்டார்கள்; திருமா தகவல்
Advertisement
Advertisement