அதிமுக எம்எல்ஏக்கள் அமைச்சரவையில் இடம்பெறமாட்டார்கள்; திருமா தகவல்
சென்னை: தவெக அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏக்கள் இடம்பெறமாட்டார்கள் என விடுதலை சிறுத்தைக்கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நிருபர்களிடம் விடுதலை சிறுத்தைக்கட்சி தலைவர் திருமாவளவன் கூறியதாவது: அமைச்சரவையில் இடம்பெறுமாறு ஆதவ் அழைப்பிற்கு நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன். எங்கள் கட்சியின் உயர்நிலை குழு 8ம் தேதி மாலை 6 மணிக்கு கூடியது. ஆன்லைன் கூட்டமாக நடைபெற்றது; 9 மணி அளவில் அது நிறைவுபெற்றது. அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பெரும்பாலானவர்கள் அமைச்சரவையிலும் இடம்பெற வேண்டும் என்ற கருத்தை முன்மொழிந்தது அனைவருக்கும் தெரியும்.
ஆனாலும் நிறைவாக தலைவர் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுகிறோம் என்ற உறுதியை தந்தார்கள். ஆட்சி அமைப்பதற்கு மட்டுமே தங்களது நிபந்தனையற்ற ஆதரவை கொடுத்தோம். பதவியேற்புக்கு பிறகு வேளச்சேரிக்கு வந்த விஜய் தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார். அதை இப்பொழுது மீண்டும் வெளிப்படையாக ஆதவ் வழிமொழிந்து இருக்கிறார். தவெக கூட்டணியில் இணைந்து நாங்கள் தேர்தலை சந்திக்கவில்லை. இன்னொரு கூட்டணி திமுக கூட்டணியில் இடம்பெற்று இருந்தோம்.
அந்த கூட்டணியில் நாங்கள் இரண்டு இடங்களில் வெற்றி பெற்று இருந்தோம். தவெக ஆட்சி அமைப்பதற்கு இரண்டு இடங்கள் மட்டுமே தேவைப்பட்டதால் எங்களது ஆதரவை நல்கினோம். தற்போது வெளிப்படையாக தவெக முஸ்ஸிம் லீக், விசிக இடம்பெற வேண்டும் என்று விருப்பதை வெளிப்படுத்தி இருக்கிறது. அவர்களது அழைப்பை மதிக்கிறோம். நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கிறோம். இது குறித்து கட்சியின் முன்னணி பொறுப்பாளர்களுடன் கலந்து பேசி முடிவை அறிவிப்போம்.
அதிமுகவினருக்கு அமைச்சரவையில் இடம் தருவதற்கான வாய்ப்பில்லை என தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு திருமாவளவன் கூறினார்.
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
விஜய் அழைப்பு; தவெக அரசில் விசிக சேருமா? திருமாவளவன் பேட்டி; தினமலர் யூடியூப், வெப்சைட் உள்ளிட்ட இணையத்தில் நேரலை ஒளிபரப்பு
முழு பேட்டியை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
இவர் என்ன கொறடாவா?. பிழைக்க தெரிந்த திருமா
அதிமுக வுக்கு இது தேவைதான்
25 அதிமுக எம் எல் ஏ க்கள் மைண்ட் வாய்ஸ் : அப்போ கொறடா உத்தரவை மீறி த வெ க அரசுக்கு ஆதரவாக ஓட்டு போட்டது வேஸ்ட்டா கோபால்?
தவெக ஆட்சிக்கு வந்த பிறகு அவர்கள் கட்சி மற்றும் இதரக் கட்சிகளுக்கும் அவர் அவர்கள் கருத்துத் தெரிவிப்பதால் பூர்ண சுதந்திரமாகப் கருத்துத் தெரிவிக்கும் உரிமை நிலைநாட்டப்பட்டு இருப்பதால் தமிழக மக்கள் துன்பம் இனி விலகும் என எதிர்பார்க்கலாம்.
திமுக சார்பா தவெக வுடன் பேசுகிறார் போல ... சோ, தவெக திமுகவின் பி டீம் என்பது கன்பர்ம் ...
எனது முதலமைச்சர் கனவில் மண்ணள்ளி போட்டது யார் >>
ம்.. மதுவிலக்கு துறையை முதல்வர் விஜய் அவர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு கொடுக்க வேண்டும். சாராய குடியால் சீரழிந்த தமிழ் சமுதாயம். அதிலும் தாழ்த்தப்பட்ட மற்றும் மிக பிற்படுத்தப் பட்ட சமூகங்கள்தான் மிகவும் கெட்டு அழிந்து கொண்டு இருக்கின்றன. சீர் திருத்தி முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல வி சி க-விக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்.
வி.சி.க சட்டமன்ற உறுப்பினர்கள் த.வெ.க அமைச்சரவையில் ஒரு முறை அமைச்சர்களாக ஆகி விட்டால் அப்புறம் கட்சித் தலைமையை, திருமாவை திரும்பிப் கூட பார்க்க மாட்டார்கள். அவர்கள் ஏறத்தாழ த.வெ.க உறுப்பினர்கள் ஆகி இருப்பார்கள். காலச் சூழலுக்கு ஏற்ப பின்னர் திருமாவே அவர்களை அமைச்சர் பதவியில் இருந்து விலகச் சொன்னாலும் விலக மாட்டார்கள். நிச்சயம் இது தான் நடக்கும். இதுவே ஐ.யூ.எம்.எல்க்கும் பொருந்தும்.
டிவிகே யின் இந்த அமைச்சரவை குறித்த முடிவை அறிவிக்க வேண்டியது டிவிகே யின் செய்தித் தொடர்பாளர் .... அல்லது கட்சித் தலைமை / முதல்வர் .... டிவிகே யில் நீங்க யாரு திருமா ????
இவரது கட்சி விசிகவா அல்லது அதிமுகவா ?மேலும்
-
இந்த இக்கட்டான சூழலில் இருந்து மக்களை யாராலும் காப்பாற்ற முடியாது; சொல்கிறார் ராகுல்
-
பாதாள சாக்கடை பராமரிப்பு முக்கிய ரோடுகளில் தேவை
-
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் நுழைய முயன்ற எம்எல்ஏ முஸ்தபா; பக்தர்கள் கொந்தளிப்பு
-
மூத்தோர் தடகளத்தில் அசத்தல் வீராங்கனைக்கு பாராட்டு
-
உலர் களம் இல்லாததால் சிக்கல் கல்லாபுரத்தில் கவலை
-
பைன் பாரஸ்ட்டில் குவிந்த சுற்றுலா பயணியர்