வெளிநாடுகளில் இந்தியாவின் கவுரவத்தை உறுதி செய்யும் மோடி: சரத் பவார் பாராட்டு

14

மும்பை: அரசியலை விட நாட்டு நலனே முக்கியம் எனக்கூறியுள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் , வெளிநாடுகளில் இந்தியாவின் கவுரவத்தை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார் எனத் தெரிவித்துள்ளார்.


நிகழ்ச்சி ஒன்றில் சரத் பவார் பேசியதாவது: வெளிநாடுகளில் இந்தியாவின் உறுதி செய்யவும் பாதுகாக்கவும் பிரதமர் மோடி பணியாற்றி வருகிறார். நம்மிடம் பல்வேறு வகையான அரசியல் கருத்து வேறுபாடுகள், பார்வைகள் இருக்கலாம். ஆனால், நாட்டின் கவுரவம் என வரும்போது, அரசியல் வேறுபாட்டை முன்னிறுத்தக்கூடாது.

நாட்டின் நலனை பாதுகாக்க வாய்ப்பு கிடைக்கும் போது எல்லாம் அனைத்து கட்சிகளும் ஒற்றுமையாக பணியாற்ற வர வேண்டும். பொதுவான நோக்கத்துடன் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.

இந்திரா, நரசிம்மராவ் மற்றும் மன்மோகன் சிங் ஆகியோர் மத்தியில் ஆட்சி செய்த போது நாட்டின் எதிர்காலத்துக்காகவும், பெருமைக்காகவும் பணியாற்றினர். இவ்வாறு அவர் கூறினார்.

காங்கிரஸ் விமர்சனம்



பிரதமர் மோடி அரசு முறை பயணமாக ஐந்து நாடுகளுக்கு சென்றுள்ளார். இதனை விமர்சித்த ராகுல், சாமானிய மக்கள் வெளிநாடு செல்ல வேண்டாம் எனக்கூறிவிட்டு பிரதமர் மோடி உலகம் சுற்றி வருவதாக தெரிவித்து இருந்தார். காங்கிரஸ் தலைவர்களும் பிரதமரை விமர்சித்து இருந்தனர். இதற்கு பாஜ பதிலடி கொடுத்து இருந்தது. இந்நிலையில், சரத்பவாரின் கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Advertisement