'போர்வாள்' நாளிதழ் துவங்கினார் இபிஎஸ்!

9

சென்னை: போர்வாள் என்ற தமிழ் நாளிதழை அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் துவங்கி உள்ளார்.

அதிமுக ஆளுங்கட்சியாக இருந்தபோது, 'நியூஸ் ஜெ' செய்தி சேனல், அதிமுகவுக்காக தொடங்கப்பட்டது. சேனல் நிர்வாகத்தை, முன்னாள் அமைச்சர்கள் சண்முகம், வேலுமணி உள்ளிட்டோர் மேற்கொண்டனர். நடந்து முடிந்த தேர்தலில் அதிமுக மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டு, கட்சியும் இரண்டாக பிளவு பட்டுள்ளது.

சண்முகம், வேலுமணி தரப்பினரை, கட்சி பொறுப்புகளில் இருந்து அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ் நீக்கி உள்ளார். இதையடுத்து, 'நியூஸ் ஜெ சேனல், எங்களுக்கு சொந்தமானது' என கூறிய சண்முகம், வேலுமணி தரப்பினர், இபிஎஸ் செய்திகளை புறக்கணித்ததோடு, அவருக்கு எதிரான செய்திகளை ஒளிபரப்பினர். அதேபோல, நமது அம்மா நாளிதழும் இபிஎஸ் கையை விட்டு போய் விட்டது.

இபிஎஸ் பெயரில் வெளிவந்த நாளிதழ், சில நாட்களாக வேலுமணி பெயரில் வெளியாக துவங்கி விட்டது. இபிஎஸ்சை விமர்சனம் செய்தும் அதில் செய்திகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் இன்று (மே 20) அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான போர்வாள் தமிழ் நாளிதழை கட்சி பொதுச்செயலாளர் இபிஎஸ் வெளியிட்டார். கட்சியின் முன்னணி நிர்வாகிகள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Advertisement