குட்கா விற்ற  முதியவர் கைது 

பெண்ணாடம், மே 18–

பெட்டி கடையில் குட்கா பதுக்கி வைத்த கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

பெண்ணாடம் சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் நேற்று காலை ரோந்து சென்றனர். அப்போது, வடகரை கிராமத்தில் பெட்டிக்கடை ஒன்றில் சோதனை செய்தபோது, அங்கு குட்கா பாக்கெட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

போலீசார் அங்கு பதுக்கி வைத்திருந்த 19 குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து, அதே பகுதியை சேர்ந்த கடை உரிமையாளர் சுப்ரமணியன், 86, என்பவரை கைது செய்தனர்.   

 

Advertisement