பயிற்சி முகாம் நிறைவு விழா

திருப்பரங்குன்றம்: மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழு மற்றும் மத்திய அரசின் புதுமையாக்கம் பிரிவு சார்பில் தொழில் முனைவோர் மாணவர் மேம்பாட்டிற்கான முகாமில் 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். புதிய வாய்ப்புகளை கண்டறிதல், அதில் ஏற்படும் பிரச்னைகள், தீர்வு காணுதல், மாறுபட்ட வாய்ப்புகளை உருவாக்குதல், தொழில் முயற்சிக்கான நிதியை எவ்வாறு திட்டமிடுதல் என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

நிறைவு விழாவிற்கு முதல்வர் அசோக்குமார் தலைமை வகித்தார். அகில இந்திய தொழில்நுட்பக் குழு மேலாளர் ஆனந்த் சுப்புராஜ், வித்துவான் அறக்கட்டளை பயிற்சியாளர் அன்புமணி முன்னிலை வகித்தனர். சிறந்த மாணவர் குழுவினருக்கு பரிசு வழங்கப்பட்டது. கணினி துறைத் தலைவர் ஷாலினி நன்றி கூறினார். டீன் ஹரிஹரன், பேராசிரியர் கார்த்திகா ஒருங்கிணைத்தனர்.

Advertisement