கோயில் உண்டியல் பணம் திருட்டு

திருவாடானை:

திருவாடானை அருகே ஆய்ங்குடி கிராமத்தில் அய்யனார் கோயில் ஒதுக்குபுறமான இடத்தில் தனியாக அமைந்துள்ளது. வழக்கம் போல் நேற்று முன்தினம் மாலை பூஜைகள் முடிந்து பூஜாரி கோயிலை பூட்டிவிட்டு சென்றுள்ளார். இக் கோயிலை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இரவில் கோயில் உண்டியலை உடைத்து பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்த பணத்தை திருடி சென்றனர். திருவாடானை போலீசார் விசாரிக்கின்றனர். 

Advertisement