சிக்னல் இயக்க நடவடிக்கை தேவை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியின் முக்கிய சாலைகளில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிக்னல் கம்பங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வந்து போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நான்கு முனை சந்திப்பு, சேலம், சென்னை உள்ளிட்ட முக்கிய சாலைகளின் வழிநெடுகிலும் சிக்னல் கம்பங்கள் அதிகளவில் வைக்கப்பட்டு, எவ்வித பலனும் இல்லாமல் தேவையின்றி எரிகின்றன.

போக்குவரத்து நெரிசல் குறையாமல் உள்ள கள்ளக்குறிச்சியின் சாலைகளில் வரிசையாக அமைக்கப்பட்டுள்ள இந்த சிக்னல் விளக்குகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement