மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு
குளித்தலை:குளித்தலை
அடுத்த லாலாப்பேட்டை கொடிக்கல் தெருவை சேர்ந்தவர் நிவேதா, 25;
இவருக்கும், கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்., கோவக்குளம் குடித்தெருவை
சேர்ந்த மணிகண்டன், 27, என்பவருக்கும் காதல் திருமணமாகி, இரண்டு ஆண்
குழந்தைகள் உள்ளனர்.
கணவன், மனைவி இடையே கருத்துவேறுபாடு
காரணமாக, ஆறு ஆண்டுகளாக பிரிந்து, நிவேதா பெற்றோருடன் வசித்து
வருகிறார். கடந்த, 15 மாலை, 6:00 மணிக்கு, நிவேதா வீட்டில்
இருந்துள்ளார். அப்போது அங்கு சென்ற கணவர் மணிகண்டன், குழந்தைகளை
பார்க்க
சென்றுள்ளார். அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு
நிவேதாவை, மணிகண்டன் தாக்கி உள்ளார்.
இதுகுறித்து நிவேதா கொடுத்த புகார்படி, லாலாப்பேட்டை போலீசார், மணிகண்டன் மீது
வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நார்டிக் கூட்டமைப்பு மாநாடு; ஐந்து நாட்டு பிரதமர்களுடன் மோடி பேச்சு
-
அசந்து துாங்கிய இளம்பெண் 5 சவரன் நகை பறிப்பு
-
நீதிபதிக்கு எதிராக அவதுாறு ‘மாஜி’ முதல்வருக்கு நோட்டீஸ்
-
சிக்னல் இயக்க நடவடிக்கை தேவை
-
பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?
-
உயர்திரு வெங்கடேஷ் சார் விருப்பம் தினமலர் பவளவிழா வாழ்த்து
Advertisement
Advertisement