சோழர்களின் பெருமையை பறைசாற்றும் செப்பேடுகள் பிரதமர் மோடி புகழாரம்

21

சென்னை: பிரதமர் நரேந்திர மோடியின் அறிக்கை:

பதினோறாம் நுாற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால செப்பேடுகள், நெதர்லாந்தில் இருந்து இந்தியாவுக்கு திரும்ப கொண்டு வரப்பட இருக்கின்றன. இவை தொடர்பான விழாவில், அந்நாட்டின் பிரதமர் ராப் ஜெட்டனுடன் இணைந்து பங்கேற்றேன்.

சோழர் கால செப்பேடுகள், 21 பெரிய மற்றும் மூன்று சிறிய தகடுகளின் தொகுப்பாகும். இவற்றில் பெரும்பாலான எழுத்துகள், உலகின் மிகவும் அழகான மொழிகளில் ஒன்றான தமிழில் பொறிக்கப்பட்டுள்ளன. இவை, முதலாம் ராஜேந்திர சோழன், தன் தந்தை முதலாம் ராஜராஜனால் வாய்மொழியாக அளிக்கப்பட்ட வாக்குறுதியை முறைப்படுத்தியதைக் குறிக்கின்றன; சோழர் களின் பெருமையை பறைசாற்றுகின்றன.

இந்தியர்களாகிய நாம், சோழர்களின் கலாசாரம், கடற்படை திறமை ஆகியவற்றால் மிகுந்த பெருமை கொள்கிறோம். நெதர்லாந்து அரசுக்கும், குறிப்பாக 19ம் நுாற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் இருந்து செப்பேடுகளை பாதுகாத்து வந்த லெய்டன் பல்கலைக்கும் என் நன்றி.

இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Advertisement