அ.தி.மு.க., மனுக்கள் மீது முடிவு எடுக்க காலக்கெடு ஏதும் இல்லை: சபாநாயகர்

3

சென்னை: ''அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களின் மனுக்கள் மீது முடிவெடுக்க, காலக்கெடு நிர்ணயிக்கப்படவில்லை,'' என, சபாநாயகர் பிரபாகர் கூறினார்.

தான் வெற்றி பெற்ற, சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில், மக்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்து, சபாநாயகர் பிரபாகர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுக்கு பின், அவர் கூறியதாவது:

சட்டசபை அ.தி.மு.க., தலைவர், கொறடா உள்ளிட்ட நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக, அ.தி.மு.க.,வின் இரண்டு பிரிவு எம்.எல்.ஏ.,க்கள் தரப்பில் இருந்தும், மனுக்கள் தரப்பட்டுள்ளன.

மனுக்கள் மீது முடிவெடுக்க, அரசியலமைப்பு சட்டத்தின்படி, எந்தவொரு குறிப்பிட்ட காலக்கெடுவும், சபாநாயகருக்கு விதிக்கப்படவில்லை. அவர்கள் அளித்த மனுக்கள் பரிசீலனையில் உள்ளன. உரிய நடைமுறைகளை பின்பற்றி, அவற்றின் மீது தகுந்த முடிவு எடுக்கப்படும். சட்டசபை கூடும்போது, அது தொடர்பாக முறைப்படி அறிவிக்கப்படும்.

இவ்வாறு சபாநாயகர் கூறினார்.

Advertisement