இந்தியாவில் முழுவேகத்தில் சீர்திருத்த நடவடிக்கைகள்: பிரதமர் மோடி பெருமிதம்

14


கோதன்பெர்க்: இந்தியாவில் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் முழு வேகத்தில் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ள பிரதமர் மோடி, ஸ்வீடன் நிறுவனங்கள் சுத்தமான எரிசக்தி, பசுமை ஹைட்ரஜன் உள்ளிட்ட துறைகளில் முதலீடு செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டு உள்ளார்.


ஐந்து நாடுகள் சுற்று பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், நெதர்லாந்தை தொடர்ந்து, ஸ்வீடன் சென்றுள்ளார். அந்நாட்டு பிரதமர் அழைப்பின் பேரில் இரண்டு நாட்கள் பயணமாக மோடி ஸ்வீடன் சென்றார். பிரதமர் மோடி பயணித்த விமானம், ஸ்வீடன் எல்லைக்குள் நுழைந்ததும், அந்நாட்டு போர் விமானங்கள், பாதுகாப்புக்கு உடன் வந்தன.


Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
விமான நிலையத்தில் தரையிறங்கிய பிரதமர் மோடியை, ஸ்வீடன் பிரதமர் உல்ப் கிறிஸ்டர்சன் நேரில் வந்து வரவேற்றார். அந்நாட்டு அரசு முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. ஸ்வீடனில் வசிக்கும் இந்திய மக்கள், பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

உயரிய விருது



இரு நாடுகளுக்கு இடையே சிறப்பான உறவுக்காக பிரதமர் மோடி அளித்த பங்களிப்பு, தலைமை பண்பினை அங்கீகரிக்கும் வகையில் ஸ்வீடன் நாட்டின் உயரிய விருதான ராயல் ஆர்பர் ஆப் போலார் ஸ்டார், கமாண்டர் கிராண்ட் கிராஸ்' விருதை, அந்நாட்டின் இளவரசி விக்டோரியா, பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவித்தார். இது மோடிக்கு கிடைக்கும் 31வது உயிரிய விருதாகும்.

முன்னேற்றம்



இதனைத் தொடர்ந்து, தொழில்துறையினர் பங்கேற்ற கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: மின்னணுவியல், தொழில்நுட்ப உற்பத்தி, செயற்கை நுண்ணறிவு, பசுமை ஆற்றல், உள்கட்டமைப்பு, போக்குவரத்து, நகர்ப்புற மாற்றம், சுகாதாரம், மற்றும் உயிர் அறிவியல் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.


கடந்த 12 ஆண்டுகளாக சீர்திருத்தங்கள், செயல்திறன் மற்றும் மாற்றம் ஆகிய அடிப்படை கொள்கையின்படி இந்தியா செயல்பட்டுவருகிறது. அரசின், அரசியல் உறுதி காரணமாக, இந் தீர்திருத்த விரைவு ரயில் முழு வேகத்தில் முன்னேறிவருகிறது.


ஜனநாயக வெளிப்படைத்தன்மை, புதுமை மற்றும் ஸ்திரத்தன்மை போன்றவற்றால், இந்தியாவும், ஸ்வீடனும் இணைக்கப்பட்டுள்ளன. புதுமை மற்றும் ஸ்திரத்தன்மையில் ஸ்வீடனின் பலங்களை இந்தியாவின் திறன் மற்றும் வளர்ச்சி வேகத்துடன் இணைக்க வேண்டும்.


இந்தியா ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. வர்த்தகம், தொழில்நுட்பம், உற்ப்தி, சேவைகள் மற்றும் மீள்திறன் கொண்ட விநியோக சங்கிலிகள் ஆகியவற்றில் புதிய வாய்ப்புகளை உருவாக்கும்.
இவ்வாறு மோடி பேசினார்.


உலகில் முதலீடு, புதுமை மற்றும் உற்பத்தி ஆகியவற்றுக்கு உகந்த நாடாக இந்தியா திகழ்கிறது என்று கூறிய பிரதமர் மோடி, இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி, அடுத்த தலைமுறைக்கான பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள், எளிதாக தொழில் செய்தல், நிர்வாகத்தில் கவனம், டிஜிட்டல் உள்கட்டமைப்பை விரிவுபடுத்துதல், துடிப்பான உற்பத்தி சூழல் ஆகியவற்றை எடுத்துரைத்தார்.

மேலும் இந்தியாவில் வடிவமைத்து, இந்தியாவில் தயாரித்து, இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யுங்கள் என்ற இந்தியாவின் கொள்கையை எடுத்துக்காட்டி, ஐரோப்பிய நிறுவனங்கள், இந்தியாவை நம்பகமான மற்றும் உகந்த பொருளாதார சக்தியாக ஏற்க வேண்டும் எனத் தெரிவித்தார்.


இந்த கூட்டத்தில், ஸ்விடன் இளவரசி விக்டோரியா, பிரதமர் கிரிஸ்டெர்சன், ஐரோப்பிய யூனியன் தலைவர் உர்சுலா வான் டெர்லையன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement