கிலுகிலுப்பை காட்டும் நபர் : விஜய் மீது உதயநிதி விமர்சனம்
தஞ்சாவூர்: 'தமிழகத்திற்கு தாயாக உள்ள தி.மு.க.,வையும், நம் தலைவரையும் நோக்கி, மக்கள் நிச்சயம் வருவர். நிச்சயம், சூரியன் மறுபடியும் உதிக்கும்' என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற திருமண விழாவில், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி பேசியதாவது: பத்து நாட்களிலேயே, த.வெ.க., ஆட்சியின் உண்மையான முகத்தை, தமிழக மக்கள், பெண்கள், இளைஞர்கள், ஜென்சி கிட்ஸ் அனைவரும் உணர்ந்திருப்பர். போகப்போக இன்னும் பலருக்கு பல உண்மைகள் தெரிய வரும்.
தாயின் பாதுகாப்பில் இருக்கும் குழந்தை, 'கிலுகிலுப்பை' ஆட்டி விளையாட்டு காட்டும் ஆளை பார்த்து மயங்கி, அவரிடம் செல்லும். ஆனால், கிலுகிலுப்பை காட்டும் நபரிடம், அந்த குழந்தை நிரந்தரமாக இருக்காது. உண்மையான பாசம் எதுவென தெரிந்து, மீண்டும் தாயிடம் திரும்பி வரும்.
அதுபோல, கவர்ச்சி, மாயாஜாலத்தை காட்டி மக்களை சிலர் ஈர்த்துள்ளனர். இந்த கவர்ச்சி, மக்களின் எந்த பிரச்னைக்கும் தீர்வு காணாது. தமிழகத்திற்கு தாயாக உள்ள தி.மு.க.,வையும், நம் தலைவரையும் நோக்கி, அந்த குழந்தை போல் இருக்கும் மக்கள் நிச்சயம் வருவர். நிச்சயம், சூரியன் மறுபடியும் உதிக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
கிளுகிளுப்பு பார்ட்டியை விட கிலுகிலுப்பு பார்ட்டியே பரவாயில்லை என்கிற முடிவுக்கு மக்கள் வந்துவிட்டார்கள். அதன் பிரதிபலிப்புதான் தேர்தல் முடிவுகள்.
விடிந்துவிட்டது சீக்கிரம் எழுந்திருக்கவும் கனவு காண்பது போதும்
திமுகவின் உதய சூரியன் உண்மையில் வானில் தோன்றும் சூரியன் அல்ல. சினிமா செட்டில் போடப்பட்ட உதய சூரியன். சூட்டிங் முடிந்தது. எல்லாரும் வீட்டிற்கு போய்விட்டனர். போ போ
ஒவ்வொருத்தரும் குட்டி ஜமீன் மாதிரி இருந்தீங்க... அதிகாரம் பண்ணிக்கிட்டு ஆதாயம் தேடிட்டு... எதுவும் முடியல இப்போ... அதான் இப்படி புலம்புரிங்க
உதயண்ணாவுக்கு திமுகவை சரிவில் இருந்து மீட்க வேறுவழி தெரியவில்லை. அதனால் சனாதனத்தை கையில் எடுத்துவிட்டார். தமிழகம் முழுவதும் நடைபயணம் சென்று சனாதனத்தை அழித்து ஒழிப்பது பற்றி மக்கள சந்தித்து பேசி கடைசியாக ஒரு வழியாக ஒழிந்துபோய்விடுவார்.
நீங்க எலும்புத்துண்டையல்லவா காட்டினீர்கள் மக்களிடம்.. அதனால்தான் தோற்றீர்கள். இனிமே எழுச்சி இல்லை.. வீழ்ச்சி மட்டுமே. திமுக இருந்த இடம் தெரியாமல் அழியும். இது தமிழக மக்களின் சாபம்.
தம்பி நீயும்தான் செங்கலை காட்டுன.. மக்களை ஏமாத்துன....போலி திராவிடம் பேசி மக்களை 60 வருடங்கள் கொள்ளையடிச்சிங்க. திராவிடத்தின் முடிவுரையை நீதான் எழுதப்போற. அதற்க்கு வாழ்த்துக்கள். இனி மக்கள் வாக்கு சீமானுக்கும் விஜய்க்கும்தான்.
26 கட்சிகளுடன் கூட்டணி வைத்து படுதோல்வி அடைந்தது ஏன். TVK தனித்து நின்று உங்களின் பணபலம், கட்சிகளின் பலத்தை சுத்தமாக அடித்து ஒடுக்கியது சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. மீண்டும் எழுவது ரொம்ப ரொம்ப கஷ்டம். மத்திய அரசின் ED கேஸ்களை எதிர் கொள்ள தயாராக இருக்கவும். உன் கருப்பு பணத்தை கையாளும் திரைப்பட தயாரிப்பு கும்பலுக்கு வருகிறது ஆப்பு.
சூரியன் வரும் வரும் ஆனா டுபாக்கூர் உதயசூரியன் இனி ஆட்சிக்கு வருவதற்கே வாய்ப்பே இல்லை
பதவி இல்லாமல் மனசு தாங்க முடியல.எந்தத் தகுதியும் இல்லாம நாட்டை நீ கொள்ளையடிச்சதை எங்களால் வேடிக்கை தான் பார்க்க முடிந்தது.இப்ப அந்தக் காசை இன்னொருத்தன் அடிக்கிறான் என்கிற போது வயித்தெரிச்சல் அதிகம் வருகிறது.உங்க அம்மாவிடம் சொல்லி ,சனாதன வழிபாட்டை நிறுத்தி அல்லோலியா வழிபாடு செய்யச் சொல்லுங்க.மேலும்
-
நார்டிக் கூட்டமைப்பு மாநாடு; ஐந்து நாட்டு பிரதமர்களுடன் மோடி பேச்சு
-
அசந்து துாங்கிய இளம்பெண் 5 சவரன் நகை பறிப்பு
-
நீதிபதிக்கு எதிராக அவதுாறு ‘மாஜி’ முதல்வருக்கு நோட்டீஸ்
-
சிக்னல் இயக்க நடவடிக்கை தேவை
-
பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?
-
உயர்திரு வெங்கடேஷ் சார் விருப்பம் தினமலர் பவளவிழா வாழ்த்து