ராகுல் மீது கடும் விமர்சனம்: காங்., - எம்.பி., கண்டனம்
- நமது நிருபர் -
திருச்செந்துார் தொகுதியில் வென்ற தி.மு.க., முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் பேசுகையில், 'காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஐந்து பேரும் துரோகிகளாக மாறி விட்டனர். நாட்டில் காங்கிரசார் போல் துரோகிகள் யாரும் இல்லை. வரும் காலங்களில், தமிழகத்தில் இருந்து எம்.பி.,க்களை பெறலாம் என ராகுல் நினைத்தால், அது கனவிலும் நடக்காது. அவர் முகத்தில் தமிழக மக்கள் கரியை பூசுவர்' என விமர்சித்தார்.
இந்த பேச்சை கண்டித்து, காங்., -- எம்.பி., மாணிக்கம் தாகூர் வெளியிட்ட அறிக்கை:
பதவி பறிபோன விரக்தியில் சிலரின் மொழியின் தரம் எந்த அளவுக்கு கீழே விழுகிறது என்பதற்கு உதாரணமே, அனிதா ராதாகிருஷ்ணனின் பேச்சு. தி.மு.க., தலைமையிடம் ஒரு கேள்வி, ராகுலையும், எங்கள் மூத்த தலைவர்களையும், தொடர்ந்து தரக்குறைவாக பேசும் அரசியலை, தி.மு.க., தலைமையே ஊக்குவிக்கிறதா? இல்லையெனில் உடனே கண்டிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
துாத்துக்குடி காங்., மாவட்ட தலைவர் பெருமாள்சாமி கூறுகையில், ''எங்கள் தலைவர்களை தொடர்ந்து அவதுாறு பேசினால், பொது இடத்திற்கு வரும்போது கருப்பு மையை வீசுவோம்,'' என்றார்.
ஒன்று தீய சக்தி.இன்னொன்று போலி மதசார்பின்மைக் கட்சி...இரண்டு தீயவர்கள் அடித்துக் கொள்வது போலத்தான்.
அனிதா கூறியதில் என்ன தப்பு இருக்கு மாணிக்
இதே அனிதா ராதாகிருஷ்னன் முதலில் இருந்த கட்சி எங்கே அ.தி.மு.க. விலுருந்தே திமுகவிரற்கு
ஓடி ஓடி வந்துள்ளார் அப்போது அவரை துரோகி என்று மற்றவர்கள் இப்போது சொல்ல முடியுமா அது என்னடா தனக்கு ஒரு சட்டமா அடுத்தவர்களுக்கு ஒரு சட்டமா வாய் எப்படி வேண்டுமானாலும் பேசும்மேலும்
-
நார்டிக் கூட்டமைப்பு மாநாடு; ஐந்து நாட்டு பிரதமர்களுடன் மோடி பேச்சு
-
அசந்து துாங்கிய இளம்பெண் 5 சவரன் நகை பறிப்பு
-
நீதிபதிக்கு எதிராக அவதுாறு ‘மாஜி’ முதல்வருக்கு நோட்டீஸ்
-
சிக்னல் இயக்க நடவடிக்கை தேவை
-
பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?
-
உயர்திரு வெங்கடேஷ் சார் விருப்பம் தினமலர் பவளவிழா வாழ்த்து