மே23ல் திமுக இளைஞரணி ஆலோசனை கூட்டம்; உதயநிதி அறிவிப்பு

4

சென்னை: திமுக இளைஞரணி ஆலோசனைக் கூட்டம் வரும் மே 23ம் தேதி நடைபெறும் என்று அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான உதயநிதி அறிவித்துள்ளார்.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தோல்வியைச் சந்தித்த திமுக, ஆட்சியை இழந்தது. இந்தத் தோல்விக்கான காரணம் குறித்தும், கட்சியின் செயல்பாடு பற்றியும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த சூழலில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் வரும் 23ம் தேதி திமுக இளைஞரணி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி அறிவித்துள்ளார்.

இந்தக் கூட்டத்தில் கருணாநிதியின் பிறந்த நாள் கொண்டாட்டம், இளைஞரணியின் ஆக்கப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட இருக்கிறது.

Advertisement