அச்சுறுத்தும் தெரு நாய்களை கருணைக்கொலை செய்யலாம்; சுப்ரீம் கோர்ட் உத்தரவு
புதுடில்லி: தெருநாய்களை பொது இடங்களில் இருந்து அப்புறப்படுத்தும்படி 2025ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை சுப்ரீம்கோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. தெருநாய்களை சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட நடைமுறைப்படி கருணைக்கொலை செய்யலாம் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டார்.
நாட்டில் வெறிநாய்க்கடி மற்றும் அதனால் ரேபிஸ் நோய் ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகரித்து வந்த நிலையில் செய்திகள் அடிப்படையில் சுப்ரீம்கோர்ட் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது.
கடந்த 2025ம் ஆண்டு நவம்பர் 25ம் தேதி பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் ரயில் நிலையங்கள் போன்ற நிறுவனப் பகுதிகளில் இருந்து அனைத்து தெருநாய்களையும் அகற்றுமாறு சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை திரும்ப பெறக்கோரி நாய் பிரியர்கள் சுப்ரீம்கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் இன்று (மே 19) சுப்ரீம்கோர்ட் நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவுகள்:
* ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் ஒரு விலங்குகளுக்கான கருத்தடை மையம் செயல்படுத்த வேண்டும்.
* மக்கள் தொகையை கருத்தில் கொண்டு, விலங்குகளுக்கான கருத்தடை மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.
* கண்ணியத்துடன் வாழ்வதற்கான உரிமை என்பது, நாய்க்கடி அச்சுறுத்தலின்றி சுதந்திரமாக வாழ்வதற்கான உரிமையை உள்ளடக்கியது; இந்த விஷயத்தில் அரசு ஒரு செயலற்ற பார்வையாளராக இருக்க முடியாது.
* தெருநாய்கள் விவகாரத்தில் அனைத்து மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* நாய்கள் மூலம் பொதுமக்களுக்கு ஏற்படும் ஆபத்தை தடுக்க வேண்டும்.
* மனித உயிர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் நோய்வாய்ப்பட்ட மற்றும் ஆக்ரோஷமாக இருக்கும் தெருநாய்களை சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட நடைமுறைப்படி கருணைக்கொலை செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தள்ளுபடி
தெருநாய்களை பொது இடங்களில் இருந்து அப்புறப்படுத்தும்படி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
தெருக்களில் சாலைகளில் மாடு, எருமை போன்றவைகள் சுதந்திரமாக திரிகின்றன. பல உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. ஏற்கனவே சட்டம் போட்டாச்சு, அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் தண்டனை என்று. ஆனாலும் இதுவரை யாரும் தண்டிக்கப்படவில்லை. அதனால் இதை கண்காணிக்கவேண்டிய அரசு அதிகாரிகளுக்கும் சம்பந்த பட்ட துறை அமைச்சருக்கும் தண்டனை கொடுத்தால் என்ன?
இதேபோல் மனிதர்களை வெட்டிசாய்க்கும் கூலிப்படைக்கும் கருணை கொலை தான் தண்டனையாக கொடுக்கணும். ஆயுள் தண்டனை, தூக்கு தண்டனை எல்லாம் சரிப்பட்டு வராது.
எல்லாவற்றிற்கும் நீதிமன்றம் சென்றால், அப்போ மந்திரிகள், அரசு அதிகாரிகள் எதற்கு. நீதிமன்றமே நாட்டை ஆளட்டுமே?
ஏம்ப்பா கொழந்தே இது வரைக்கும் தூங்கிட்டா இருந்தே
Alternatively, peta and such other dog lovers can be ordered to keep rabid and violent dogs in their custody . Additionally, orders can be passed to forbid them from eating non veg food as a gesture of mercy towards animals.
இது ஒரு நல்ல தீர்ப்பு. வரவேற்க வேண்டும். நாய் பிரியர்கள் கொதித்து எழுவார்கள்.
நாய்கடியால் இருப்பவர்களுக்கு 1 கோடி அரசும் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் தர வேண்டும். பிராணிகள் நல சங்க நிதியிலிருந்து 50% வருவாய் அரசுக்கு இழப்பீடு கொடுக்க எடுத்துக்கொள்ளவேண்டும். பிராணிகள் நல விரும்பிகள் கட்டாயமாக நன்கொடை கொடுக்க வேண்டும்
நாய்ப் பிரியர் யார் என்று பார்த்தால் நாய் பிஸ்கட் நாய் மருந்து ரேபிஸ் மருந்து தயாரிப்போரின் மாஃபியா ஏஜெண்டுகள்.நாய் வர்த்தகம் வருடத்திற்கு ₹10,000 கோடி..இந்த நாய்ப்பிரியர்கள் பெரும்பாலும் காரில் சென்று வருவோர்.இவர்கட்கு நாய்க்கடி பற்றித் தெரியாது.
அது கருணை கொலை இல்லை யுவர் ஆனர் என்கௌண்டர்
அது கருணை கொலை இல்லை கொலை சொல்லுங்க எசமான் கொலை ..கொலை ...எங்கடா புழு கிராசு ..அப்படியே அவனுகளுக்கும் ஒரு தீர்ப்பு ஏழுதூங்க எசமான் ...மேலும்
-
நார்டிக் கூட்டமைப்பு மாநாடு; ஐந்து நாட்டு பிரதமர்களுடன் மோடி பேச்சு
-
அசந்து துாங்கிய இளம்பெண் 5 சவரன் நகை பறிப்பு
-
நீதிபதிக்கு எதிராக அவதுாறு ‘மாஜி’ முதல்வருக்கு நோட்டீஸ்
-
சிக்னல் இயக்க நடவடிக்கை தேவை
-
பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?
-
உயர்திரு வெங்கடேஷ் சார் விருப்பம் தினமலர் பவளவிழா வாழ்த்து