பொதுக்குழு முடிவை தலைவணங்கி ஏற்போம்: சிவி சண்முகம், வேலுமணி தரப்பு அறிவிப்பு

11


சென்னை: பொதுக்குழு முடிவை தலைவணங்கி ஏற்போம் என சிவி சண்முகம், வேலுமணி தரப்பு தெரிவித்து உள்ளது.

சென்னையில் சிவி சண்முகம், வேலுமணி தரப்பு நிருபர்களை சந்தித்து பேட்டி அளித்தது. அப்போது சிவி சண்முகம் கூறியதாவது: சட்டசபை தேர்தலில் இபிஎஸ் தலைமையில் அதிமுக மீண்டும் படுதோல்வியை சந்தித்துள்ளது. இது முதல் தோல்வி அல்ல; 2019ல் இருந்து தொடர் தோல்வி அடைந்துள்ளது. அதிமுக ஓட்டு வங்கி சரிவை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.

தவெக, கூட்டணி வைக்க முன்வந்தது. ஆனால் இபிஎஸ் உதாசீனப்படுத்தினார். தேமுதிக, புதிய தமிழகம் என யாரையும் அரவணைக்காமல் சென்றார் இபிஎஸ். அவர் நியமித்துள்ள புதிய நிர்வாகிகள் நியமனம் செல்லாது. இபிஎஸ் யாரையும் அரவணைக்கவில்லை. நாங்கள் தவறு செய்தது போன்ற பிம்பத்தை ஏற்படுத்த இபிஎஸ் முயற்சி. பொதுக்குழுவை கூட்ட வேண்டும்; அதில் நாங்கள் பேசுவதற்கு தயாராக இருக்கிறோம்.

பொதுக்குழு முடிவை தலைவணங்கி ஏற்போம். பொதுக்குழுவை கூட்ட வேண்டும்; அதில் நாங்கள் பேசுவதற்கு தயாராக உள்ளோம். இப்போது தனது பொறுப்புக்கு பாதிப்பு வருவதால் பிரிந்து சென்றவர்களை ஏற்று கொள்வதாக கூறுகிறார்; முன்னதாகவே செய்திருந்தால் இபிஎஸ் இப்போது முதல்வர் ஆகி இருப்பார்.

அதிமுகவை மீட்டெடுப்பது தான் எங்களது ஒரே குறிக்கோள். பொதுக்குழுவை கூட்டி ஆலோசிக்க வேண்டும் என்பது தான் எங்களது நிலைப்பாடு. நிர்வாகிளை மிரட்டினால் கட்சி எப்படி வளரும்; கட்சியின் விதிகளை இபிஎஸ் மீறுகிறார். இவ்வாறு சிவி சண்முகம் கூறினார்.

Advertisement