வரும் 22ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்
செங்கல்பட்டு:செங்கல்பட்டில், தனியார் வேலைவாய்ப்பு முகாம், வரும் 22ம் தேதி, நடக்கிறது.
இதுகுறித்து, கலெக்டர் மாலதி ஹெலன் வெளியிட்ட அறிக்கை:
செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக ஒருங்கிணைந்த கட்டடத்தில், செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் உள்ளன.
இங்கு, படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு, வரும் 22ம் தேதி காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை, தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.
இந்த முகாமில், 50க்கும் மேற்பட்ட முன்னனி தனியார் நிறுவனங்கள், 5,000 பணியிடங்களுக்கான நேர்காணலை நடத்துகிறது.
மேலும் விபரங்களுக்கு www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது தகவல்களை பகிர்ந்து கொள்ளலாம்.
இதில், 8 மற்றும் 10ம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு பி.இ., ஐடிஐ மற்றும் டிப்ளமா முடித்தோர் இந்த முகாமில் பங்கேற்கலாம்.
மேலும் விபரங்களுக்கு, 044- 27426020- 9499055895 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
நார்டிக் கூட்டமைப்பு மாநாடு; ஐந்து நாட்டு பிரதமர்களுடன் மோடி பேச்சு
-
அசந்து துாங்கிய இளம்பெண் 5 சவரன் நகை பறிப்பு
-
நீதிபதிக்கு எதிராக அவதுாறு ‘மாஜி’ முதல்வருக்கு நோட்டீஸ்
-
சிக்னல் இயக்க நடவடிக்கை தேவை
-
பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?
-
உயர்திரு வெங்கடேஷ் சார் விருப்பம் தினமலர் பவளவிழா வாழ்த்து