காஞ்சிபுரத்தில் வரும் 22ல் வேலை வாய்ப்பு முகாம்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில், நாளை மறுதினம், தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடக்க உள்ளது என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து, காஞ்சிபுரம் கலெக்டர் சினேகா வெளியிட்ட செய்தி அறிக்கை:
காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருக்கும், காஞ்சிபுரம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில், நாளை மறுதினம், காலை 9:30 மணி அளவில் நடக்கும் முகாமில், 100க்கும் மேற்பட்ட தனியார் நிறுவன அதிகாரிகள் நேர்கானல் நடத்த உள்ளனர்.
இதில், 18 - 35 வயது வரை இருக்கும், பட்டதாரிகள், டிப்ளமோ, ஐ.டி.ஐ, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 படித்தவர்கள் தங்களின் அசல் கல்வி சான்றிதழ்கள் மற்றும் போட்டோவுடன் பங்கு பெறலாம்.
கூடுதல் விபரங்களுக்கு, 044 -27237124 என்ற தொலைபேசி எண்ணில், காஞ்சிபுரம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர்களை தொடர்பு கொள்ளவும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்
-
நார்டிக் கூட்டமைப்பு மாநாடு; ஐந்து நாட்டு பிரதமர்களுடன் மோடி பேச்சு
-
அசந்து துாங்கிய இளம்பெண் 5 சவரன் நகை பறிப்பு
-
நீதிபதிக்கு எதிராக அவதுாறு ‘மாஜி’ முதல்வருக்கு நோட்டீஸ்
-
சிக்னல் இயக்க நடவடிக்கை தேவை
-
பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?
-
உயர்திரு வெங்கடேஷ் சார் விருப்பம் தினமலர் பவளவிழா வாழ்த்து