58 கிராம பாசன விவசாயிகள் கூட்டம்

உசிலம்பட்டி: உசிலம்பட்டி சின்னக்கருப்பசாமி கோயிலில் 58 கிராம பாசன விவசாயிகள் சங்க கூட்டம் நிர்வாகிகள் தலைவர் ஜெயராஜ், செயலாளர் சிவப்பிரகாசம், பொருளாளர் செந்தில்குமார் முன்னிலையில் நடந்தது.

வைகை அணையில் 58 கிராம பாசன கால்வாய் மதகின் உயரத்தை குறைத்து ஆண்டுதோறும் தண்ணீர் கிடைக்கும் வகையில் நீர்ப்பாசனத் திட்டமாக 58 கிராம பாசன கால்வாய் திட்டத்தை அறிவிக்க வேண்டும். இதற்காக முதல்வர், அமைச்சர்களை சந்தித்து கோரிக்கை விடுப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement