சிறுமிக்கு பாலியல் தொந்தரவு வாலிபர் மீது 'போக்சோ'

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தவர் மீது போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப் பதிந்தனர்.

கச்சிராயப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன் மகன் வினித், 24; இவர், சில தினங்களுக்கு முன் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இது குறித்து தகவலறிந்த சிறுமியின் உறவினர் அளித்த புகாரின் பேரில், வினித் மீது கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement