கோயிலை அகற்ற மக்கள் எதிர்ப்பு

எரியோடு:எரியோடு குருக்களையம்பட்டியில் நெடுஞ்சாலை இடத்தில் சாலை காளியம்மன் கோயிலை கட்டி மக்கள் வழிபடுகின்றனர். தனியார் இடத்தில் இருக்கும் மற்றொரு கோயில் வளாகத்திற்கு இடையூறாக இருப்பதால் நெடுஞ்சாலையில் இருக்கும் சாலை காளியம்மன் கோயிலை அகற்ற தொடரப்பட்ட வழக்கில் ஆக்கிரமிப்பு அகற்ற உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து நெடுஞ்சாலையில் இருக்கும் கோயிலை அகற்ற நெடுஞ்சாலைத்துறையினர் (மே 21) சென்றனர். அங்குள்ள மக்களும், ஹிந்து முன்னணி நிர்வாகிகளும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து கோயில் அகற்றும் பணியை துவக்காமல் நெடுஞ்சாலைத்துறையினர் திரும்பி சென்றனர்.

Advertisement