தொடர்கிறது வெடிகுண்டு மிரட்டல்

கோவை: கோவை கலெக்டர், பாஸ்போர்ட் அலுவலகங்களுக்கு நேற்றும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. போலீசார் சோதனை செய்தனர். போலி மிரட்டல் என உறுதி செய்தனர். இவ்விவகாரத்தில் போலீசார் செய்வது அறியாமல் திணறி வருகின்றனர்.

தற்போது வரை வந்த இ-மெயில் வடிவ முறை, அதில் குறிப்பிடப்பட்டுள்ள விபரங்கள், எழுத்து நடை, வார்த்தை பயன்பாடு போன்றவற்றை ஆய்வு செய்து, குறிப்பிட சில துறைகளை சார்ந்தவர்களாக இருக்கக்கூடும் என்று சந்தேகித்துள்ளனர். தொடர்ந்து, மூன்றுபேர் கொண்ட குழுவினர் இதனை விசாரித்து வருகின்றனர்.

Advertisement