தமிழகத்தில் மலர்ந்தது கூட்டணி ஆட்சி; ஆண்டவன் மீது ஆணையிட்டு 23 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு
சென்னை: முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவை, இன்று (மே 21) விரிவாக்கம் செய்யப்பட்டது. 23 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.
இந்நிலையில், இன்று (மே 21) காலை 10:00 மணிக்கு, கவர்னர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடைபெற்றது. தமிழக கவர்னர் அர்லேக்கரை பூங்கொத்து கொடுத்து முதல்வர் விஜய் வரவேற்றார். 23 பேர் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர். அவர்களுக்கு தமிழக கவர்னர் அர்லேக்கர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
காங்கிரஸ் சார்பில், ராஜேஷ்குமார், விஸ்வநாதன் ஆகியோர், அமைச்சர்கள் ஆகினர். தமிழக அமைச்சரவையில், 59 ஆண்டுகளுக்கு பின், காங்கிரஸ் மீண்டும் இடம்பெற்றது. கோவை வடக்கு எம்எல்ஏ சம்பத்குமார் மற்றும் கிணத்துக்கடவு எம்எல்ஏ விக்னேஷ் ஆகிய இருவர் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர். இதுவரை விஜயலட்சுமி (குமாரபாளையம்), கமலி (அவிநாசி), ஜெகதீஸ்வரி (ராஜபாளையம்), கீர்த்தனா (சிவகாசி) ஆகிய 4 பேர் இடம்பெற்றுள்ளனர்.
ஆண்டவன் மீது ஆணையிட்டு பதவியேற்ற அமைச்சர்கள் பெயர் பட்டியல்!
1. ஸ்ரீநாத்- துாத்துக்குடி (ஆண்டவன் மீது)
கல்வித்தகுதி: பிளஸ் 2
2. கமலி- அவிநாசி (ஆண்டவன் மீது)
கல்வித்தகுதி: எம்.ஏ., ஆங்கில இலக்கியம்
3.விஜயலட்சுமி- குமாரபாளையம் (ஆண்டவன் மீது)
கல்வித்தகுதி: பிளஸ் 2
4.ரஞ்சித்குமார்-காஞ்சிபுரம் (ஆண்டவன் மீது)
பி.ஏ., (திறந்தநிலை பல்கலை)
5.வினோத்- கும்பகோணம் (ஆண்டவன் மீது)
கல்வித்தகுதி: பி.இ., (இடைநிற்றல்)
6. ராஜிவ் - திருவாடானை (ஆண்டவன் மீது)
கல்வித்தகுதி: எம்.பி.பி.எஸ்.,
7.ராஜ்குமார் - கடலுார் (ஆண்டவன் மீது)
கல்வித்தகுதி: டிப்ளமோ (மெக்கானிக்கல் இன்ஜி.,)
8.காந்திராஜ்- அரக்கோணம் (ஆண்டவன் மீது)
கல்வித்தகுதி: பிஏ., (இடைநிற்றல்) ஐடிஐ (எலட்ரீசியன்)
9.மதன் ராஜா- ஒட்டப்பிடாரம் (ஆண்டவன் மீது)
கல்வித்தகுதி: பி.இ.,
10.ஜெகதீஸ்வரி- ராஜபாளையம் (ஆண்டவன் மீது)
கல்வித்தகுதி: பி.எஸ்சி.,
11.ராஜேஷ்குமார்- கிள்ளியூர் (ஆண்டவன் மீது)
''பெருந்தலைவர் காமராஜர் நாமம் வாழ்க, ராஜிவ்காந்தி நாமம் வாழ்க, ராகுல் காந்தி நாமம் வாழ்க'' என்று கூறி கிள்ளியூர் காங்கிரஸ் எம்எல்ஏ ராஜேஷ்குமார் அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார்.
கல்வித்தகுதி: பி.எல்., (பெங்களூரு பல்கலை) எம்.ஏ., (விநாயகா மிஷன் பல்கலை)
12.விஜய் பாலாஜி- ஈரோடு கிழக்கு (ஆண்டவன் மீது)
கல்வித்தகுதி: பி.காம்., (சி.எஸ்.,)
13.லோகேஷ் தமிழ்செல்வன்- ராசிபுரம் (ஆண்டவன் மீது)
கல்வித்தகுதி: பி.காம்., (லயோலா கல்லுாரி) எம்.பி.ஏ.,
14.விஜய் தமிழன் பார்த்திபன்- சேலம் தெற்கு (ஆண்டவன் மீது)
கல்வித்தகுதி: பிளஸ் 2
15.ரமேஷ்- ஸ்ரீரங்கம் (ஆண்டவன் மீது)
கல்வித்தகுதி: பி.இ.,
16.விஸ்வநாதன்- மேலுார் (ஆண்டவன் மீது)
கல்வித்தகுதி: பி.ஏ., (சென்னை பல்கலை)
17.குமார்- வேளச்சேரி (ஆண்டவன் மீது)
கல்வித்தகுதி: பி.இ., (சிவில்)
18.தென்னரசு-ஸ்ரீபெரும்புதூர் (ஆண்டவன் மீது)
கல்வித்தகுதி: 10ம் வகுப்பு (தேர்ச்சி பெறவில்லை)
19.சம்பத் குமார்- கோவை வடக்கு (ஆண்டவன் மீது)
கல்வித்தகுதி: எம்பிஏ (தொலைதுார பட்டப்படிப்பு, அண்ணாமலை பல்கலை)
20.முகமது பர்வேஸ்- அறந்தாங்கி (ஆண்டவன் மீது)
கல்வித்தகுதி: பி.ஏ., எல்எல்பி (ஹானர்ஸ்)
21.சரத்குமார்- தாம்பரம் (ஆண்டவன் மீது)
கல்வித்தகுதி: பி.பி.ஏ.,
22.மரிய வில்சன்- ஆர்கே நகர் (ஆண்டவன் மீது)
கல்வித்தகுதி: பி.டெக்., எம்.பி.ஏ.,
23.விக்னேஷ்- கிணத்துக்கடவு (ஆண்டவன் மீது)
கல்வித்தகுதி: பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ்
@block_P@
இன்று பதவியேற்ற 23 அமைச்சர்கள், ஏற்கனவே பதவியேற்ற முதல்வர் உள்ளிட்ட 10 பேரில், ஆதவ் ஒருவர் மட்டுமே உளமாற உறுதி கூறி பதவியேற்றவர்; மற்ற அனைவரும் ஆண்டவன் மீது உறுதி கூறி பதவியேற்றுள்ளனர்.block_P
@block_G@
தமிழக கவர்னர் அர்லேக்கர் மற்றும் முதல்வர் விஜய்யுடன் புதிய அமைச்சர்கள் குழு புகைப்படம் எடுத்து கொண்டனர்.block_G
மாவட்ட வாரியாக அமைச்சர்கள் எண்ணிக்கை:
* சென்னை-7
* நாமக்கல்- 3
* கோவை-2
* காஞ்சிபுரம்-2
* மதுரை-2
* ஈரோடு-2
* விருதுநகர்-2
* தூத்துக்குடி-2
* ராமநாதபுரம்-1
* திருப்பூர்-1
* செங்கல்பட்டு-1
* ராணிப்பேட்டை-1
* சிவகங்கை-1
* கன்னியாகுமரி-1
* திருச்சி-1
* கடலூர்-1
* தஞ்சாவூர்-1
* புதுக்கோட்டை-1
* சேலம்-1
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
தமிழக புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா; தினமலர் வெப்சைட், யூடியூப் உள்ளிட்ட இணையத்தில் நேரலை ஒளிபரப்பு
வீடியோ பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
தமிழக அரசின் துறை சார்ந்த இணைய தளங்களில் இன்னமும் "எனது இந்தியா, எனது வாக்கு, நான் பாரதம்" என்னும் அறிவிப்பு காணப்படுகிறதே, அது ஏன்?
அடுத்த தேர்தலுக்கு இன்னும் மூன்று ஆண்டுகள் உள்ளதல்லவா?
பாராட்டுக்கள் . உண்மையில் வரவேற்க வேண்டிய நடவடிக்கை. அது போல , சுய நிதி பொறியியற்கல்லூரிகள் நடத்தும் வசூல் வேட்டையால் நடுத்தர மக்கள் படும் இன்னல்களுக்கும் ஒரு முடிவு கட்டவேண்டும். அனைத்து இடங்களையும் கவுன்சிலிங் மூலமே நிரப்பவேண்டும். அல்லது ஒரு 80% சதவீதமாவது கவுன்சிலிங் மூலம் நிரப்பவேண்டும். மீதி 20% இடத்தில் வேண்டுமானால் அவர்கள் சம்பாதித்துக்கொள்ளட்டும் .அரசு நிர்ணயித்துள்ள , நிர்வாக ஒதுக்கீடு இடங்களுக்காண கூடுதல் கட்டணங்களை வாங்கிக்கொள்ளட்டும். இவ்வாறு செய்தால் பொதுமக்கள் அதுவும் நடுத்தர மக்கள் முதல்வரை உண்மையான தலைவராக பார்ப்பார்கள். உதாரண புருஷனாக நினைப்பார்கள் . ஆனால் சுயநல கூட்டம் கூட்டணியாக எதிர்க்கும் .
திமுக அண்ணா திமுக ஆதிக்க கோட்டை விஜய்யால் தகர்ந்தது. கூட்டணி ஆட்சி மலர்ந்தது. ஆனால் திமுக நுழை வாயில் வழியே சாதி மத கட்சிகள் உள்ளே புகாமல் பார்த்து கொண்டது. முஸ்லிம் லீக், கிறித்துவ லீக் போன்ற கட்சிகளுக்கு கருணா, ஸ்டாலின் அமைச்சர் பதவி வழங்கவில்லை. ஏன் திருமா கட்சிக்கு கூட வழங்கவில்லை. விஜய் கூவி கூவி அமைச்சர் பதவி கொடுக்க, விஜய் ஒரு மம்தா, கேஜரிவால் போன்று மாற வேண்டிய அவசியம் வரும். புதிய மேற்கு வங்கம் உதயம். ? காரணம் முஸ்லிம் மக்கள் அடிப்படை மத கல்வியை மாற்ற முடியாது. பிரச்சனை தாங்க முடியாமல் வீதிக்கு ஒரு ஆர் எஸ் எஸ் மற்றும் விசுவ ஹிந்த் பரிசத் போன்ற அமைப்புகள் தோன்றும். ஆட்சி நிலைக்க சாதி மத முட்டு.
செய்யும் செயல்கள் எல்லாம் ஆண்டவன் ஓடி போகும் அளவுக்கு இருக்கும் என்பது தான் இதன் அர்த்தம்.
தமிழ்நாட்டில் கடவுளின் பெயரால் சத்தியம் செய்வது மிகவும் முக்கியமாகிவிட்டது. கடவுள் நம்பிக்கை இல்லாத திமுக அதைச் செய்யாத ஒரே காரணத்திற்காக, அது ஒரு விவாதப் பொருளாகிவிட்டது.
இது எல்லாம் சரி பதவி ஏற்று வாய்த்த ஆளுநர் அர்லேர்கர் என்ன படிச்சி இருக்கார் அதையும் சொல்லுங்க மக்கள் தெரிஞ்சுக்கட்டும் ..
BCom.Real degree
மே 21. இன்று ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட நாள். இந்த நாளில் இரு காங்கிரஸ் காரர்கள் மந்திரி ஆகி உள்ளனர் .
குடி குடியை கெடுக்கும் என்பது C V சண்முகம் விஷயத்தில் நிரூபிக்க பட்டுள்ளது. 1977 லில் இருந்து மாரி மாரி ஆட்சிக்கு வந்த ஒரு கட்சி நேற்று முளைத்த தற்குறிகளால் சுட்டு அடிக்கப்பட்டுள்ளது. இது ஒரு பாடம்.
இன்னொரு பிராமண அமைச்சர் வீரமணி கனிமொழி கும்பலுக்கு வயிறு எரியும்
ஆண்டவன்னு இவங்க சொல்றது முன்னர் ஆண்ட ஸ்டாலினையே குறிக்கிறது. இரண்டு கட்சிகளின் கொள்கைகளுக்கும் வித்தியாசம் ஒன்றுமில்லை. தி.மு.க கைத்தடிகளின் உதவியால்தான் ஆட்சியே நடக்கிறது. ஆக இது மானங்கெட்ட திமுக 2.0 ஆட்சி.