குன்றத்து கோயிலில் வசந்த உற்ஸவம் துவக்கம்
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வசந்த உற்ஸவம் நேற்று சுவாமிகளுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது.
நேற்று மாலையில் சுவாமி, தெய்வானைக்கு அபிஷேகம் முடித்து சிறப்பு அலங்காரமாகி காப்பு கட்டப்பட்டது. இரவு 7:00 மணிக்கு வசந்த மண்டபத்தின் மையப்பகுதியில் தண்ணீர் நிரப்பி, மேடையில் அமைத்திருந்த ஊஞ்சலில் சுவாமி, தெய்வானை எழுந்தருளினர். அங்கு 30 நிமிடங்கள் வசந்த உற்ஸவம் நடந்தது.
இந்நிகழ்ச்சி மே 29 வரை நடக்கும். விசாக பால்குட திருவிழாவை முன்னிட்டு மே 30 அதிகாலை 5:00 மணிக்கு சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு பாலாபிஷேகம் முடிந்து காலை 7:00 மணிக்கு விசாக கொறடு மண்டபத்தில் எழுந்தருள்வர். சுவாமிக்கு மதியம் 2:00 மணி வரை பால் அபிஷேகம் செய்யப்படும்.
மே 31 காலையில் சுவாமி, தெய்வானை தங்கக் குதிரை வாகனத்தில் தியாகராஜர் பொறியியல் கல்லுாரி வளாகத்திலுள்ள மொட்டையரசில் எழுந்தருளுவர். பின்னர் மொட்டையரசு திருவிழா முடிந்து, இரவு பூப்பல்லக்கில் கோயிலுக்கு திரும்புவர்.
மேலும்
-
பொது பாதை தொடர்பாக தகராறு 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு
-
த நியூ ஜான்டூயி பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை
-
எஸ்.வி.பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி
-
வடலுாரில் அகவல் பாராயண பிரார்த்தனை
-
பட்டப்பகலில் வீடு புகுந்து 13 சவரன் நகை கொள்ளை
-
4 பேரிடம் ரூ. 3 லட்சம் மோசடி