ராஜிவ் நினைவு தினம் அனுசரிப்பு

குறிஞ்சிப்பாடி: மறைந்த முன்னாள் ராஜீவ் நினைவு தினத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

குறிஞ்சிப்பாடி, நகர காங்கிரஸ் சார்பில், முன்னாள் பாரத பிரதமர் ராஜிவ், 35ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.

குறிஞ்சிப்பாடி நகர தலைவர் குமார் தலைமை தாங்கினார். பஞ்சாயத்து ராஜ் மாவட்ட தலைவர் குமரவேல் முன்மொழிய, கட்சியினர் உறுதிமொழி ஏற்றனர்.

மாவட்ட செயலாளர் சிவராஜ் சண்முகம் முன்னிலை வகித்தார். சிவசங்கரன், நகர செயலாளர் கோவிந்தராஜ், சிறுபான்மை பிரிவு தலைவர் அகமது உசேன், பழனிசாமி, சண்முகம், லட்சுமணன், தெய்வநாயகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement