அரசு பள்ளிகளுக்கு இலவச தண்ணீர் தொட்டி

கூடலுார்: கூடலுார் தொரப்பள்ளியில், ‘ரோட்டரி கிளப் கூடலுார் மவுண்டன்’ சார்பில், 16 அரசு பள்ளிகள் மற்றும் புறமணவயல் பழங்குடி கிராமத்துக்கு, 2,000 லிட்டர் தண்ணீர் தொட்டி வழங்கும் விழா நடந்தது. செயலாளர் பரசுராம் வரவேற்றார். தலைவர் தன்ராஜ் தலைமை வகித்தார். கூடலுார் எம்.எல்.ஏ., திராவிடமணி தண்ணீர் தொட்டிகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில், ரோட்டரி கிளப் மாவட்ட உதவி ஆளுனர் பிரகாஷ், ரோட்டரி சங்க நிர்வாகிகள் எல்ஜீதாமஸ், சைனல்பாபு, வர்கீஸ், ஜம்ஷீத், உசேன், சுனில் குமார் மற்றும்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர். அப்சல் நன்றி கூறினார்.

Advertisement