டவுன் பஞ்., தலைவிக்கு கணவர் 'வாய்ஸ்'

பாலமேடு: மதுரை மாவட்டம், சோழவந்தான் தொகுதி த.வெ.க., - எம்.எல்.ஏ., கருப்பையா, பாலமேடு பேரூராட்சி அலுவலகத்தில் நேற்று ஆய்வு செய்தார். பேரூராட்சி தலைவியின் கணவரான தி.மு.க., நிர்வாகியான பாண்டிய ராஜனிடம், குறைகளை கேட்டறிந்தார்.

'தங்கு தடையின்றி குடிநீர் வழங்க வேண்டும். அடுத்து வரும்போது குப்பை கிடந்தால், நானே அள்ளுவேன்' என, எம்.எல்.ஏ., தெரிவித்தார்.

பேரூராட்சி தலைவி சுமதிக்கு பதிலாக, அவரது கணவரிடம் திட்ட பணிகள் குறித்து எம்.எல்.ஏ., பேசி சென்றது சர்ச்சையாகி உள்ளது.

Advertisement