ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கிய இணை இயக்குநர் 'சஸ்பெண்ட்'

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில், குறிப்பிட்ட கல்குவாரிக்கு அனுமதி பெற, குத்தகைதாரர்கள் கனிமவளத்துறை இணை இயக்குநர் சீனிவாச ராவ் என்பவரை அணுகினர்.

குவாரி உரிமம் தொடர்பான கோப்புகளுக்கு, ஒப்புதல் அளிக்க சீனிவாச ராவ், 2 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

ஒப்பந்ததாரர்கள், கனிம வளத்துறை மேலதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.

இந்த விவகாரம், இயற்கை வளங்கள் துறை அமைச்சர் பிரபு கவனத்துக்கு எடுத்து செல்லப்பட்டது. லஞ்சம் கேட்கும் அதிகாரி மீது, விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க, அமைச்சர் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

விசாரணையில், அவர், 2 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டது தெரிந்தது. தொடர்ந்து, அவரை சஸ்பெண்ட் செய்து, அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

Advertisement