தற்கொலைக்கு முயன்ற சிறுமியை காப்பாற்றிய தீயணைப்பு வீரர்கள்
என்.ஆர்.ஐ.: ஐந்தாவது மாடியில் இருந்து தற்கொலை செய்ய முயன்ற 16 வயது சிறுமியை தீயணைப்பு வீரர்கள், போலீசார் பத்திரமாக மீட்டனர்.
பெங்களூரு என்.ஆர்.ஐ., லே - அவுட்டில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பின் ஐந்தாவது மாடியில் உள்ள மதில் சுவரில் நின்றுகொண்டு, கீழே குதித்து தற்கொலை செய்ய போவதாக, நேற்று மதியம் 16 வயது சிறுமி கூறினார். இதனால், அடுக்கு மாடி குடியிருப்பு கட்டடத்தை சுற்றியும் பலரும் கூடினர்.
இது குறித்து, ஹொய்சாலா போலீசார், தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு போலீசார், தீயணைப்பு வீரர்கள் வந்தனர்.
இவர்கள் சிறுமிக்கு தெரியாதவாறு, அடுக்கு மாடி குடியிருப்பின் படிக்கட்டுகளில் ஏறினர். சத்தம் கொடுக்காமல் சிறுமியின் பின்பக்கம் சென்ற இரண்டு அதிகாரிகள் திடீரென அவரது கை, காலை பிடித்தனர்.
மதில் சுவரில் இருந்து மெதுவாக கீழே இறக்கி, தண்ணீர் கொடுத்து சமாதானம் செய்தனர். இதை பலரும் தங்கள் மொபைல் போனில் வீடியோவாக எடுத்தனர்.
இந்த வீடியோ, சமூக வலைத்தளத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. தீயணைப்பு வீரர்கள், போலீசாரின் முயற்சியை பலரும் பாராட்டினர்.
மேலும்
-
நிழற்குடையில் இருக்கைகள் சேதம் சீரமைக்க பயணியர் வலியுறுத்தல்
-
மந்தவெளி அம்மனுக்கு பால்குட ஊர்வலம்
-
சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
-
விளம்பர விருப்பம் வித்யாசாகர் மகளிர் கல்லுாரி 17ம் ஆண்டு பட்டமளிப்பு விழா
-
ஜெயப்பிரியா பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா
-
தவ அமுதம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி