பெட்ரோல் விலை உயர்வை கண்டித்துகம்யூ., கட்சிகள் ஆர்ப்பாட்டம்
கரூர்::கரூர் ஜவகர் பஜாரில் உள்ள தலைமை தபால் நிலையம் முன், கம்யூ., கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சி.பி.ஐ.எம்.எல். மாவட்ட செயலர் பொன்னுரங்கம் தலைமை வகித்தார். போக்குவரத்து, அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வுக்கு காரணமான பெட்ரோல், டீசல் விலை உயர்வை கைவிட வேண்டும்.
உணவகங்கள், சிறு தொழில்கள் மூட காரணமான வணிக சிலிண்டர் விலை உயர்வை கைவிட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.
மா.கம்யூ., மாவட்ட செயலர் ஜோதிபாசு. மாநகர செயலர் தண்டபாணி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜமுக
முது, முருகேசன், இ.கம்யூ., மாவட்ட செயலர் கலாராணி உள்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement