லாட்டரி சீட்டு விற்றவர் கைது
பெண்ணாடம், மே 23–
பெண்ணாடத்தில் லாட்டரி சீட்டுகள் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
பெண்ணாடம் சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் நேற்று காலை 9:30 மணியளவில் ரோந்து சென்றனர். அப்போது, பெண்ணாடம் பஸ் நிலையம் அருகே சந்தேகத்தின்பேரில் நின்றவரை பிடித்து விசாரித்தபோது, கொத்தட்டை, மேற்கு தெருவைச் சேர்ந்த உலகநாதன்,57, என்பதும் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதும் தெரிந்தது.
உடன், போலீசார் வழக்குப் பதிந்து உலகநாதனை கைது செய்து, அவரிடமிருந்து லாட்டரி சீட்டுகள், 100 ரூபாய் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கட்டுமான பகுதியில் கம்பி வளைப்புக்கு விடைகொடுங்கள்!
-
கட்டுமான பணியில் காணப்படும் தவறான நம்பிக்கைகள்!
-
கட்டடத்தின் மேல்தளத்தில் புதிய வகை 'ஸ்லாப்' அமைக்கலாம்!
-
புதிய வீடு கட்ட எந்த வகை ஒப்பந்தத்தை எப்படி தேர்வு செய்ய வேண்டும்?
-
வீடு கட்டுவதா வாங்குவதாl: குழப்பத்துக்கு தீர்வு என்ன?
-
குறைந்த பரப்பளவு நிலத்தில் நெருக்கடி இல்லாமல் வீடு கட்டுவது அவசியம்!
Advertisement
Advertisement