மத்திய அரசுக்கு ரூ.2.87 லட்சம் கோடி ஈவு தொகை வழங்கியது ரிசர்வ் வங்கி
மும்பை: ரிசர்வ் வங்கி, 2025 - 26 நிதியாண்டுக்கான ஈவுத்தொகையாக 2.87 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது.
தற்போதைய புவிசார் அரசியல் சவால்களுக்கு மத்தியிலும் இந்த உச்சபட்ச ஈவுத்தொகை அரசுக்கு கிடைத்துள்ளது. ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையிலான மத்திய இயக்குநர் குழு, தனது 623வது கூட்டத்தில் இம்முடிவை எட்டியது.
கடந்த 2024 - 25ல் 2.69 லட்சம் கோடி அளவுக்கு ஈவு தொகையை ரிசர்வ் வங்கி, அரசுக்கு கொடுத்தது.
இது, 2023 - 24ஐவிட 27.40 சதவீத உயர்வு ஆகும். அவ்வாண்டில் 2.10 லட்சம் கோடி ரூபாய் அரசுக்கு கொடுக்கப்பட்டது. கடந்த 2022 - 23ல் 87,416 கோடி ரூபாய் அளவுக்கு ஈவுத்தொகை வழங்கப்பட்டது.
“அபாய நிதி ஒதுக்கீடு மற்றும் சட்டப்பூர்வ நிதிகளுக்கு மாற்றுவதற்கு முன்பான நிகர வருவாய், 2025 - 26 நிதியாண்டில் 3,95,972.10 கோடி ரூபாயாக இருந்தது. முந்தைய 2024 - 25 நிதியாண்டில் இது 3,13,455.77 கோடி ரூபாயாக இருந்தது,” என்று ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும்
-
கட்டுமான பகுதியில் கம்பி வளைப்புக்கு விடைகொடுங்கள்!
-
கட்டுமான பணியில் காணப்படும் தவறான நம்பிக்கைகள்!
-
கட்டடத்தின் மேல்தளத்தில் புதிய வகை 'ஸ்லாப்' அமைக்கலாம்!
-
புதிய வீடு கட்ட எந்த வகை ஒப்பந்தத்தை எப்படி தேர்வு செய்ய வேண்டும்?
-
வீடு கட்டுவதா வாங்குவதாl: குழப்பத்துக்கு தீர்வு என்ன?
-
குறைந்த பரப்பளவு நிலத்தில் நெருக்கடி இல்லாமல் வீடு கட்டுவது அவசியம்!