கஞ்சா பதுக்கிய   இருவர் கைது

விருத்தாசலம்: மங்கலம்பேட்டையில் கஞ்சா பதுக்கிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

மங்கலம்பேட்டை இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் மாலை ரோந்து சென்றபோது, மாரி மகன் கிருஷ்ணமூர்த்தி, 45, அன்வர் அலி மகன் இம்ரான் அலி, 26, ஆகியோர் கஞ்சா பது க்கி வைத்திருந்தது தெரிந்தது.

அவர்களிடம் இருந்து, 84 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கைது செய்தனர்.

Advertisement