சனாதனத்தை அறிந்து கொள்ளுங்கள்: உதயநிதிக்கு ஸ்ரீதர் வேம்பு அறிவுரை

80

சென்னை: தர்மம் என்ற தமிழ் வார்த்தையின் அர்த்தம் என்ன என்பதை ஆராயுமாறு உதயநிதிக்கு ஸோகோ நிறுவனத்தின் ஸ்ரீதர் வேம்பு அறிவுறுத்தி உள்ளார்.

சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி தோல்வியடைந்ததால், அந்த
கூட்டணியில் இருந்த காங்கிரஸ், தவெகவுக்கு ஆதரவளித்து, ஆட்சியிலும் பங்கு எடுத்துள்ளது. இதனால், கடும் அதிருப்தியடைந்த திமுக, காங்கிரசை கடுமையாக விமர்சித்து வருகிறது.

சென்னையில் நடந்த திமுக இளைஞர் அணி ஆலோசனை கூட்டத்திலும், "அடுத்தவர் உழைப்பில் ஒட்டுண்ணயாய் உண்டு கொழுப்பதும், தன் தேவைக்கேற்ப கொள்கை மறந்து துரோகம் புரிவதும் காங்கிரசுக்குப் புதிதில்லைதான்.

சொந்த உழைப்பில் ஒருநாளும் வெற்றி பெற முடியாமல், நம்பியவர்களுக்கு எல்லாம் துரோகமிழைக்கும் அறமில்லாத காங்கிரஸ் கட்சிக்கு வன்மையான கண் டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்" என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பாக தினமலர் நாளிதழில் வெளியான செய்தியை மேற்கோள் காட்டி உதயநிதிக்கு ஸோகோ நிறுவனத்தின் ஸ்ரீதர் வேம்பு அறிவுறுத்தி உள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது: திமுக, காங்கிரஸ் கட்சியை தர்மம் இல்லாத காங்கிரஸ் கட்சி என்று அழைக்கிறது. இதன் பொருள் "தர்மம் இல்லாத காங்கிரஸ் கட்சி" அல்லது "தர்மம் அற்ற காங்கிரஸ் கட்சி" என்பதாகும்.

இந்த தர்மம் என்ற தமிழ் வார்த்தையின் அர்த்தம் என்ன என்பதை ஆராயுமாறு உதயநிதியை நான் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

அவருக்கு ஒருவேளை தெளிவு கிடைக்கலாம். செவ்வியல் தமிழ் இலக்கியம் அனைத்திலும் பரவியிருக்கும் சனாதன தர்மத்தின் மதிப்பையும் அவர் உணரக்கூடும். தர்மம் வெல்லும். இவ்வாறு ஸ்ரீதர் வேம்பு கூறியுள்ளார்.

Advertisement